1946 இல் [[கேகாலை]]யில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்கள் மறுத்தனர் அவர்களுக்கு வேலையும் மறுக்கபட்டது. தோட்ட தொழிளாலர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கூஇக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் [[அட்டன்|அட்டன்,இலங்கை]], [[இரத்தினபுரி]], யட்டியான்தொட்டை, [[கேகலை]] பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை,இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனானயக்கா இந்திய பிரதிந்திகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார். பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்படுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளர தொடங்கிய போது 1948 [[பெப்ரவரி 4]] இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.