1,25,582
தொகுப்புகள்
சி (மத்வர், மத்துவர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
சிNo edit summary |
||
'''மத்துவர்''' அல்லது '''மத்வர்''' என்ற மத்வாச்சாரியார் (''Madhvacharya'', 1238 – 1317) [[இந்தியா]]வின் உலகமறிந்த மூன்று மதத்தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் [[அத்வைதம்|அத்வைதத்தை]] நிலைநாட்டிய [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரும்]] [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதத்தை]] நாடெங்கும் பரப்பிய [[இராமானுஜர்|இராமானுஜரும்]] ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் வழிவழியாக வந்த பல்வேறு மதக்கோட்பாடுகளின் மேன்மையால்தான் இன்றும் ஆன்மிகத்தில் தலை சிறந்த தேசமாக பாரதம் கருதப்படுகிறது. மத்வர் [[துவைதம்]] என்ற தத்துவ இயலை நிலைநாட்டினார்.
==
மத்வர் (இயற்பெயர்: '''வாசுதேவர்''') [[
==
மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது. அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி [[பிரம்ம சூத்திரம்]], சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பகவத் கீதை]] முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். [[பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து]] 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில்
[[இருக்கு வேதம்|ருக்வேதத்திலிருந்து]] 32 சூக்தங்களுக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், [[சாயனர்|சாயனரிடமிருந்து]] மாறுபட்டு, 19வது நூற்றாண்டின் [[தயானந்த
▲மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது. அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி [[பிரம்ம சூத்திரம்]], சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பகவத் கீதை]] முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். [[பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து]] 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக் எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது. இன்னும் ''மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்'' என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளை யெல்லாம் எடுத்துச்சொல்வது.
▲[[இருக்கு வேதம்|ருக்வேதத்திலிருந்து]] 32 சூக்தங்களுக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், [[சாயனர்|சாயனரிடமிருந்து]] மாறுபட்டு, 19வது நூற்றாண்டின் [[தயானந்த சரஸ்வதிக்கும்]] 20வது நூற்றாண்டின் [[அரவிந்தர்|அரவிந்தருக்கும்]] முன்னோடியாக, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்மசூத்திரம், உபநிடதங்கள், [[புராணங்கள்]] இவை எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, சித்தாந்தம் செய்திருக்கிறார்.
== '''துவைத வேதாந்தம்''' ==▼
‘துவைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக [[பிரம்மம்|பிரம்மத்தையும்]] [[ஆன்மா]]வையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை:
▲• '''ஆன்மாவும் ஆன்மாவும்''';
▲• '''பிரம்மமும் உலகும்''';
▲• '''ஆன்மாவும் உலகும்'''; மற்றும்
▲• '''உலகிலுள்ள பொருளும் பொருளும்.'''
இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால், பிரம்மம் என்று அழைக்கப்படும் [[நாராயணன்]] அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம். ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம். இதை வடமொழியில் ''ஸ்வகத பேதம்'' என்பர். அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை ''விஜாதீய பேதம்'' என்பர். மரத்திற்கும் வேறு பகுப்பைச்சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல. இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது. அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது. ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை. ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை.
மத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது.
==
மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய ''மத்வவிஜயம்'' என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது.
== மறைவு ==
மத்வருடைய மறைவும் விந்தைக்குரியதே. அவர் புவியில் அவதரித்த காரியங்கள் செவ்வனே முடிந்ததும் வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. மலர்க்குவியலுக்கடியில் மறைந்த ஆச்சாரியரை மலர்களை அகற்றிப் பார்த்தபோது அவருடைய உடலும் காணவில்லை!
==துணை நூல்கள் ==
* சுவாமி தபஸ்யானந்தர். Bhakti Schools of Vedanta. 1990 Sri Ramakrishna Math. Mylapore, Chennai.
* J.H. Dave. Immortal India (4 volumes).1959 Bharatiya Vidya Bhavan, Mumbai.
* V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism. 1994 New Age International. New Delhi. ISBN 81-224-0628-9
[[பகுப்பு:
[[பகுப்பு:
[[பகுப்பு:
[[பகுப்பு:இந்து சமயப்பிரிவுகள்]]
[[பகுப்பு:1238 பிறப்புகள்]]
[[பகுப்பு:1317 இறப்புகள்]]
[[en:Madhvacharya]]
|