'''நபி''' என்பது [[அரபு மொழி|அரபி]]ச் சொல்லாகும். இசுலாமிய மற்றும் பிற [[ஆபிரகாமிய மதங்கள்ஆபிரகாம்|ஆபிரகாமிய மதங்களின்]] நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (சல்) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ''ஃஅவ்வா'' என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று இசுலாமியர் அழைகின்றனர். இப்ராஃகிம் (ஆபிரகாம்). மூசா (மோசசு), ஈசா (இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். இசுலாமிர்களின் நபியாக போற்றப்படும் ஈசா நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முகம்மது நபி இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி [[ஆதம் நபிஆதாம்|ஆதம் (சல்)]] அவர்களுக்கும் கடைசி நபி [[முகம்மது நபி|முகம்மது (சல்)]] அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக [[இசுலாம்]] கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள் என்பது இசுலாமியரின் நம்பிக்கை ஆகும்.