பம்பாய் கலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
சிNo edit summary
வரிசை 3:
'''பம்பாய் கலகம்''' (''Bombay Mutiny'') அல்லது '''வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம்''' (''Royal Indian Navy Mutiny'') என்பது [[பிரித்தானிய இந்தியா]]வின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. [[மும்பை]] கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.
 
[[இரண்டாம் உலகஉலகப் போர்]] முடிந்த பின்னர் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போசின்]] [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தில்]] பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய [[போர்க்கைதி]]கள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது. பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில் [[ஜவகர்லால் நேரு]] போன்றோர் வழங்குரைஞர்களாகச் செயல்பட்டனர். இவ்வழக்குகள் இந்தியாவெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்திய மக்கள் அக்கைதிகளை புரட்சியாளர்களாகவும் விடுதலை வீரர்களாகவும் கருதியதால் பிரித்தானிய அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டனர். இந்த அதிருப்தியும் வெறுப்பும் பிரித்தானிய இந்தியாவின் படைப்பிரிவுகளிலும் பரவியது. முன்னரே தங்களது வேலைச்சூழலில் அதிருப்தி கொண்டிருந்த இந்திய வீரர்கள் மேலும் கோபம் கொண்டனர். ஜனவரி 1946 இல் மும்பை நகரில் தானே பகுதியில் அமைந்திருந்த எச்.எம்.ஐ.எசு அக்பர் பயிற்சித் தளத்தில் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டத் தரக்குறைவான உணவு மீது அவர்கள் அதிருப்தி கொண்டது, கலகத்துக்கு உடனடிக் காரணமாக அமைந்தது.
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}
"https://ta.wikipedia.org/wiki/பம்பாய்_கலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது