ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ja:欧州戦線における終戦 (第二次世界大戦)
சி பகுப்பு மாற்றம் using AWB (7774)
வரிசை 4:
 
==முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை==
*'''[[முசோலினி]]யின் மரணம்''' ஏப்ரல் 27, 1945ல் நேசநாட்டுப் படைகள் [[மிலான்]] நகரை சுற்றி வளைத்தன. அங்கிருந்து [[சுவிட்சர்லாந்து]]க்குத் தப்ப முயன்ற [[இத்தாலி]] நாட்டு சர்வாதிகாரி முசோலினி இத்தாலிய [[பாசிசம்|பாசிச]] எதிர்ப்புப் படையினரிடம் சிக்கினார். அவர்கள் அவரைக் கொன்று அவரது உடலை மிலான் நகரின் முக்கிய சதுக்கங்களின் ஒன்றில் தொங்க விட்டனர். ஏப்ரல் 29ம் தேதி எஞ்சியிருந்த இத்தாலிய பாசிச படைகள் சரணடைந்தன.
[[File:Stars & Stripes & Hitler Dead2.jpg|left|thumb|250px|ஹிட்லரின் மரணத்தை அறிவிக்கிறது அமெரிக்க படை இதழான ஸ்டார்ஸ் அண்ட் ஸ்டிரைப்ஸ்]]
*'''[[ஹிட்லர்|ஹிட்லரின்]] தற்கொலை''': ஏப்ரல் 30ல் [[பெர்லின் முற்றுகை|முற்றுகையிடப்பட்ட]] [[பெர்லின்]] நகரில் ஹிட்லர் தனது [[பியூரர் பதுங்கு அறை|பதுங்கு அறையில்]] தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரது மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது உயிலில் தனக்குப்பின் அட்மைரல் [[கார்ல் டோனிட்ஸ்]] நாசி ஜெர்மனியின் குடியரசுத் தலைவராக வேண்டுமென்றும் [[ஜோசப் கோயபெல்ஸ்]] வேந்தராக வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மே 1ம் தேதி கோயபெல்சும் தற்கொலை செய்து கொண்டதால், டோனிட்ஸ் மட்டும் ஜெர்மனியின் புதிய தலைவரானார்.
வரிசை 23:
 
[[File:German instrument of surrender2.jpg|right|thumb|250px|ரெய்ம்சில் கையெழுத்தாகிய சரணடைவு ஒப்பந்தம்]]
*'''ஜெர்மனியின் சரணடைவு''': மே 6ம் தேதி மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை நடத்த டோனிட்ஸ் ஜெனரல் [[ஆல்ஃபிரட் யோட்ல்|யோடிலை]] அனுப்பினார். அவர்கள் முதலில் மேற்கத்திய நேச நாடுகளிடம் மட்டும் தான் ஜெர்மனி சரணடையும் என்ற நிலையைக் கொண்டிருந்தனர். [[சோவியத் யூனியன்|சோவியத் படைகளிடம்]] சிக்கும் படைகள் மிகக் கடுமையாக நடத்தப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேலும், சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்தால், ஜெர்மானிய வீரர்கள் மேற்கத்திய நேசநாட்டுப் படைகளிடம் சரணடைய வாய்ப்புக் கிட்டும் என்றும் எண்ணினர். ஆனால் முன்னரே [[யால்டா மாநாடு|யால்டா மாநாட்டில்]] ஜெர்மனி அனைத்து நேச நாடுகளிடமும் சமமாக சரணடைய வேண்டுமென்று சோவியத் யூனியனும் மேற்கத்திய நேச நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. இதனால் ஐரோப்பாவில் நேசநாட்டுப் படைகளின் தலைமைத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] ஜெர்மனியின் தனிச்சரணடைவை ஏற்க மறுத்து விட்டார். பேச்சு வார்த்தகளை வேண்டுமென்று இழுத்தடித்தால், நேசநாட்டுப் படைகள் ஜெர்மானிய வீரர்களின் சரணை ஏற்க மறுத்துவிடும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
 
:வேறு வழியின்றி மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி [[பிரான்சு|பிரான்சின்]] ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]] சோவியத் தளபதி மார்ஷல் கிரகோரி சூக்கோவின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
[[File:Notice of end of war against German Soldier.jpg|left|thumb|250px|ஐரோப்பாவில் வெற்றி நாள் வாழ்த்துச் செய்தி]]
*'''ஐரோப்பாவில் வெற்றி''': ஜெர்மனி சரணடைந்த செய்தி பரவி [[அமெரிக்கா]]விலும், [[மேற்கு ஐரோப்பா]]விலும் மே 8ம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ”வி. ஈ தினம்“ (VE Day - Victory in Europe Day) என்று கொண்டாடப்படுகிறது. சோவியத் யூனியனிலும், [[கிழக்கு ஐரோப்ப்பா|கிழக்கு ஐரோப்பிய]] நாடுகளிலும் மே 9 ம் தேதி வி. ஈ தினம் என்று கொண்டாடப்படுகிறது. (கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள கால வித்தியாசக் காரணத்தால்)
வரிசை 33:
:எஞ்சியிருந்த படைப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியே சரணடைந்தன. மே 8ம் தேதி, [[டான்சிக்]] நகரம், [[சென் நசேர்]] துறைமுகம், [[கிரீஸ்|கிரேக்கத் தீவுகள்]], [[விஸ்துலா ஆறு|விஸ்துலா வடிநிலம்]] ஆகிய பகுதிகளிலிருந்தவை சரணடைந்தன. மே 13ம் தேதி சோவியத் படைகள் ஐரோப்பாவில் தங்கள் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. மே 16ம் தேதி கால்வாய் தீவுகளில் ஒன்றான அல்டெர்னியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. மே 20ம் தேதி ஐரோப்பாவில் கடைசி சண்டையும் முடிவுக்கு வந்தது. நெதர்லாந்தின் தீவுகளில் ஒன்றான டெக்சல் தீவில் [[சியார்சியா (நாடு)|சியார்சியாவின்]] [[போர்க்கைதி]]களுக்கும் ஜெர்மானிய காவல்ப்படைகளுக்கும் ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெற்றுவந்த சண்டை முடிவுக்கு வந்தது. இத்துடன் ஐரோப்பாவில் அமைதி திரும்பியது.
[[File:Paradejack.jpg|right|thumb|250px|கைப்பற்றப்பட்ட ஜெர்மானியப் படைப்பிரிவுச் சின்னங்கள்]]
*'''டோனிட்சின் அரசு கலைப்பு''': ஜெர்மனியின் படைகள் மே 8ம் தேதி அதிகாரப்பூர்வமாக சரணடைந்திருந்தாலும் அதன் குடிசார் அரசாங்கம் சரணடையாமல் இருந்தது. டோனிட்ஸ் தலைமையிலான இந்த அரசு ஃபிளன்ஸ்பெர்க் அரசு என்றழைக்கப்பட்டது. மே 8ம் தேதிக்குப் பின் இரு வாரங்களுக்கு இதனை நேசநாட்டுப் படைகள் கண்டுகொள்ளவில்லை. படைகள் சரணடைந்து, அரசு சரணடையவில்லையெனில் பிற்காலத்தில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என்பதை நேசநாட்டுப் போர்த் தலைமையகம் உணர்ந்தது. 1918ல் [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] இதே போன்று ஒரு நிலை உருவானதை பின்னாளில் ஹிட்லர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் (படைகள் துரோகம் செய்துவிட்டன, அரசு சரணடையவே இல்லையென்ற பிம்பத்தை உருவாக்கி). அதுபோல பிற்காலத்தில் மீண்டுமொரு நிலை உருவாகக் கூடாது என்று ஐசனாவர் கருதினார். இதனால் மே 23ம் தேதி டோனிட்சின் ஃபிளன்ஸ்பெர்க் அரசு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு அதன் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[[File:Germany occupation zones with border.jpg|right|thumb|300px|ஜெர்மனியின் நான்கு நேசநாட்டு ஆக்கிரமிப்புப் பகுதிகள்]]
*'''நேச நாட்டு வெற்றிப் பிரகடனம்''': ஜூன் 5ம் தேதி அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நான்கு நாடுகளும் ”ஜெர்மனியின் தோல்வி மற்றும் நேச நாடுகள் ஜெர்மனி மீதான முழுப்பொறுப்பேற்பு”த் தீர்மானத்தில் கையெழுத்திட்டன. இத்துடன் அதிகாரகபூர்வமாக நேச நாட்டு வெற்றி சாற்றப் பட்டது.
 
*'''போட்ஸ்டாம் ஒப்பந்தம்''': ஆகஸ்ட் 2ம் தேதி போட்ஸ்டாம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மேற்குறிப்பிட்ட நான்கு நேசநாடுகளும் அதில் கையெழுத்திட்டன. இதன்படி, ஜெர்மனியின் பகுதிகள் இவற்றுள் பிரித்துக் கொள்ளப்பட்டன. நேசநாட்டு ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்த ஜெர்மானியக் குடிமக்களின் எதிர்காலம், படைகளகற்றம் (demilitirisation), நாசிசம் களைதல் (denazification), ஜெர்மனி தரவேண்டிய போர் நஷ்ட ஈடு (war reparations) போன்ற விஷயங்கள் இதில் முடிவாகின. நேச நாட்டுக் கட்டுப்பாட்டுக் குழுமம் (Allied Control Council) உருவாக்கப்பட்டு ஜெர்மனி நான்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 30 முதல் ஓவ்வொரு ஆக்கிரமிப்புப் பகுதியும் ஒரு நேசநாட்டின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
 
*'''மேற்கு கிழக்கு ஜெர்மனிகள் உருவாக்கம்''' மேற்கத்திய நேசநாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு செப்டம்பர் 20, 1949ல் மேற்கு ஜெர்மனி குடியரசு உருவானது. அதே போல சோவியத் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் கிழக்கு ஜெர்மனியாக அக்டோபர் 7, 1949ல் மாறின.
வரிசை 46:
 
==வெளி இணைப்புகள்==
*[http://en.wikisource.org/wiki/German_Instrument_of_Surrender,_1945 German Instrument of Surrender]
*[http://www6.dw-world.de/en/worldwarII.php Deutsche Welle special coverage of the end of World War II]
*[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/7/newsid_3578000/3578325.stm On this Day 7 May 1945: Germany signs unconditional surrender]
*[http://news.bbc.co.uk/1/hi/world/europe/4497947.stm பிபிசி செய்தி],
*Charles Kiley ([[Stars and Stripes (newspaper)|Stars and Stripes]] Staff Writer).[http://web.empacc.net/~booklink/ Details of the Surrender Negotiations ''This Is How Germany Gave Up'']
 
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
[[பகுப்பு:1945 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:ஜெர்மன்செருமன் வரலாறு]]
 
[[en:End of World War II in Europe]]