'''மலையக மக்கள் முன்னணி''' இலங்கையில்[[இலங்கை]]யில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற் சங்கமுமாகும். இது பொதுவாக [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்திய வம்சாவளி தழிழர்களை]] பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. [[1986]] ஆம் ஆண்டு [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்|இலங்கை தொழிலாளர் காங்கிரசில்]] ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக இ.தொ.கா.விலிருந்து விலகிய [[பெரியசாமி சந்திரசேகரன்]] மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்.<ref>[http://www.dailynews.lk/2005/10/22/fea05.htm இ.தொ.கா.விலிருந்து பிரிவு]</ref> இது வரையிலும் அவரே அதன் தலைவராகவும் காணப்படுகிறார். இக்கட்சி ஏனைய மலையக கட்சிகளை விட [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு]] ஆதரவு நிலையையும் அதன் தலைமையுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது.
[[1994]] ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தையும் [[2003]] ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 1 ஆசனத்தையும் தேசியபட்டியலில் 1 ஆசனத்தையும் வென்றது.