ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
ஹாரி பாட்டர் அன்ட் கோப்லட் ஒவ் பயர் ஹாரி பாட்டர் புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும்.இப்புனைவு பிரித்தானிய எழுத்தாளர் ஜே.கே.ரோவ்லிங் என்பவரால் எழுதி 2000ம் ஆண்டு ஜூலை 8 ந் திகதி வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது. இப்புனைவு 2001ல் ஹூகோ விருது பெற்றது. ஹாரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 
வரி 10 ⟶ 11:
 
'''கதை சுருக்கம்'''
 
முதலாம் அத்தியாயம் : '''ரிட்லின் வீடு'''
 
கதை 50 வருடங்களுக்கு முன் லிட்டில் ஹங்லிட்டன் இல் உள்ள ரிட்லின் வீட்டில் துவங்குகிறது. அவ்வீட்டில் இருந்த ரிட்ல் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். ப்ராங் ப்ரைஸ் எனும் அவ்வீட்டு வேலைக்காரன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறான். பின் ஒரு நாள் இரவு ப்ராங் ரிட்லின் வீட்டில் மர்மமாய் விளக்கு எரிவதைப் பார்த்து சந்தேகித்து அவ்வீட்டினுள் நுழைகிறான்.அங்கு ஒரு அறையில் வால்டமோர்ட், வாம்டெய்ல் ஹாரி பாட்டரை பிடிக்க சத்திட்டம் தீட்டுவதை ஒட்டு கேட்கிறான்.பின் வால்டமோர்ட்டின் பாம்பான நாகினியால் காட்டிக்கொடுக்கப்பட்டு 'அவாடா கெடாவ்றா' மந்திரத்தில் இறக்கிறான்.
 
 
இரண்டாம் அத்தியாயம் : '''தழும்பு'''
 
ஹாரி கனவிலிருந்து விழித்தெழுகிறான்;அவனின் நெற்றியில் உள்ள மின்னல் வடிவ தழும்பு கடுமையாக எரியத் துவங்குகிறது.தனது நண்பர்களான் ரொன்,ஹர்மைனி மற்றும் பேராசிரியர் டம்பிள்டோர் ஆகியோருக்கு கடிதம் எழுத நினைக்கிறான்.பின் மனதை மாற்றி தன் ஞானத்தந்தையான சிரியஸ் ப்ளாக்குக்கு கனவைப் பற்றி குறிப்பிடாமல் தழும்பு எரிவதை மட்டும் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதுகிறான்.
 
 
மூன்றாம் அத்தியாயம் : '''அழைப்பு'''
 
மறுநாள் ஹரி தனது சித்தப்பா வீட்டில் இருக்கும் போது தன் நண்பன் ரொன்னிடம் இருந்து '''உலகக்கிண்ண குயிடிட்ச்''' இறுதிப்போட்டிக்கான அழைப்பை பெறுகிறான்.பின் ரொன் தன் குடும்பத்துடன் வந்து ஹாரியை சித்தப்பா வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு தீத்துகள் மூலம் அழைத்துச் செல்கிறான்.
 
நான்காம் அத்தியாயம் & ஐந்தாம் அத்தியாயம் : '''பரோவிற்கு திரும்புதல்'''
 
ரொன்னின் வீடான பரோவில் ரொனின் இரட்டைத் த்மையன்மார்களான ப்ரெட் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் இனிப்பு பண்டங்கள் மற்றும் குறும்பு விளையாட்டு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுவதை ஹாரி அறிகிறான்.அவர்களின் தாய் இதற்க்கு கடுமையான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.அங்கேயே ரொன்னின் மூத்த சகோதரர்களான பில் மற்றும் சார்லியை
சந்திக்கிறான்.