எவ்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்ககால அரசர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 9:
* [[வெள்ளெருக்கிலையார்]]
ஆகியோர்.
 
எவ்வி – வேள் எவ்வி
 
எவ்வியை நேரில் கண்டு பாடிய புலவர் வெள்ளெருக்கிலையார். பிற புலவர்கள் இவனைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
 
கபிலர் - புறம் 202,
குடவாயிற் கீரத்தனார். - அகம் 366,
நக்கீரர். - அகம் 126,
பரணர் - குறுந்தொகை 19, அகம் 266,
மாங்குடி கிழார் - புறம் 24,
மாமூலனார் - அகம் 115,
வெள்ளெருக்கிலையார் - புறம் 233, புறம் 234,
 
எவ்வி மிழலை நாட்டு அரசன். நீடூர் இவன் நாட்டின் தலைநகர்.
வேள் எவ்வி எனவும், நீடூர் கிழவன் எனவும் இவன் போற்றப்படுகிறான். வேளிர் குடியைச் சேர்ந்தவன் என்று கபிலர் இவனைக் குறிப்பிடுகிறார். இவன் வாய்வாள் எவ்வி எனச் சிறப்பபிக்கப்படுவதால், வாட்போரில் வல்லவன் எனத் தெரிகிறது. இவனது ஆட்சி நிழல் குளுமையாக இருக்கும் என்றும், இவனது நாட்டு முதியவர்கள் உப்பு விற்க வரும் நுளையர்களுக்குத் தேறல் தந்து மகிழ்விப்பார்கள் என்றும் ஒரு புலவர் குறிப்பிடுகிறார். இதனால் இவனது நாட்டு மக்களும் வள்ளண்மைக் குணம் மிக்கவர்கள் எனத் தெரியவருகிறது.. பாண்மகள் எவ்வி நாட்டில் தன் உப்புக்குப் பண்டமாற்றாக நெல்லைத் தந்தால் வாங்கமாட்டாளாம். முத்துக்களைத் தந்தால்தான் வாங்கிக்கொள்வாளாம். அந்த அளவுக்கு அவன் நாடு செல்வ வளம் மிக்கது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனது நாட்டைத் தனதாக்கிக் கொண்டபின் தொன்முது கோசர் ஆண்ட முத்தூரையும் கைப்பற்றிக்கொண்டான். எவ்வியின் முன்னோன் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்ததன் பயன் எவ்வியின் தொல்குடி இவனோடு அழிந்தது என்கிறார் கபிலர். எவ்வி சிறந்த வள்ளல். அவன் மார்பில் புண்பட்டு வீழ்ந்தான் எனப் பேசிக்கொண்டனர். இது பொய்யாக இருக்கக் கூடாதா, அன்று ஒருநாள் அகுதை மார்பில் இரும்புச்சக்கரம் பாய்ந்தது என்று பேசிக்கொண்டனரே. அது பொய்யாய்ப் போகவில்லையா? அதுபோல் எவ்வி வீழ்ந்தான் என்பதும் பொய்யாகக் கூடாதா, - என்று ஒரு புலவர் கலங்குகிறார். பின்னர் எவ்வி உண்மையாகவே இறந்துபோனது கண்டு பலரோடு கூடி உண்ட எவ்வி வாயில் வாய்க்கரிசி போடுகிறார்களே! அவன் உண்பானா என்றும் சொல்லி அழுகிறார் வெள்ளெருக்கிலையார். எவ்வி மாண்டபோது பாணர்கள் தலையில் பூச் சூடிக்கொள்ளவில்லையாம். எவ்வி மாண்டு கிடந்த போர்க்களத்தில் பாணர்கள் தம் வளைந்த கொம்புகளை ஊதாமல் கீழே போட்டு வணக்கம் செலுத்தினார்களாம். எவ்வி சொன்னதைக் கேளாமல் அன்னி என்பவன் திதியன் என்பவனோடு போரிட்டு மாண்டான்.
 
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எவ்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது