பந்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 26:
== தலபுராணம் ==
பந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை மகாதேவர் கோவில், குறம்பல புத்தன்கவி பகவதி கோவில், தொன்னல்லூர் பட்டுப்புறக்காவு பகவதி கோவில், கைப்புழா ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில், பூழிக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், கடக்காடு மாயாயக்ஷிக்காவு ஸ்ரீ கிருஷ்னர் கோவில், பல நூற்றாண்டுகள் பழமையான கடக்காட்டு ஜுமா மஸ்ஜித், தும்பாமொன் பாரம்பரிய தேவாலயம் மற்றும் குறம்பலையில் உள்ள செயின்ட் தோமாஸ் புனித தேவாலயம்.
== வரலாறு ==
தமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்துவந்தது. பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை பரந்து விரிந்திருந்தது. 1820 ஆண்டில் பந்தளம் திருவிதாங்கூறுடன் இணைக்கப்பட்டது.
|