கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஞானி''' என்ற பேரில் இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்துவருபவர் '''கி. பழனிச்சாமி'''. [[கோவை]]யைச் சேர்ந்தவர். தமிழாசிரியராக பணியாற்றினார். கடுமையான சர்க்கரைநோய் காரணமாக பார்வையை இழந்தமையால் முன்னரே பணிநிறைவு பெற்றார். கோவையில் வசித்து வருகிறார்.
 
ஞானி (இவர் இதழாசிரியரும், அரசியல் விமர்சகருமான [[ஞாநி (எழுத்தாளர்)|ஞாநி]] அல்ல) மார்க்சிய ஆய்வாளரான [[எஸ்.என்.நாகராஜன்|எஸ். என். நாகராஜனின்]] வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம்செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது