சி. வேலுசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சி. வேலுசுவாமி (பி: 1927, இறப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
சி. வேலுசுவாமி (பி: [[1927]], இறப்பு: [[மே 24]] [[2008]]) [[மலேசியா]]வில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். சந்திரன், கவிதைப்பித்தன், குமரன், சரவணபவன் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும் மிக அரிதாக இருந்த தொடக்க காலத்திலேயே உண்மையான தமிழ் மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடியுமாவார். மேலும் இவர் ஒரு ஆசிரியருமாவார். மேலும் இவர் 1962ல் துணைத் தலைமை ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இவர் தமது இலக்கிய, சமயப் பணிகளுக்காகப் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1948]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நடிப்பு பயிற்சிகள், பாடல்கள் ஆகியவற்றை எழுதியும் நடித்தும் பாடியுமுள்ளார். மேலும் மொழிபெயர்ப்புகளையும் திருக்குறள் பாக்களை மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சி._வேலுசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது