பிரான்சிஸ் டிரேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
02.03.1544ஆம் நாள் டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும், பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின் உருவத்தை ஒரு ஓவியமாகத் தீட்டினார். அவருக்கு 53 வயது ஆனபோது இன்னொரு ஓவியம் 1594-இல் தீட்டப்பட்டது.
 
எட்மண்ட் டிரேக் கிருத்துவ புராட்டஸ்டன்டு வகுப்பைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவரது மனைவி மேரி மைல்வேய். இவர்களுக்கு 12 மகன்கள். இத்தம்பதியரின் மூத்த மகனே பிரான்சிஸ் டிரேக் ஆவார். 1549இல் நடந்த பிரேயர் புக் ரெபெலியன் எனப்படும் மத அடக்குமுறைக் கிளர்ச்சியால், டிரேக் குடும்பத்தினர் டெவோன்ஷயரில் இருந்து கெண்ட்டுக்கு தப்பியோடினர். அங்கு அவரது தந்தையார் கிங்ஸ் நேவி என்ற கப்பற்படையில் சேர்ந்தார். பிரான்சுக்கு கப்பல்மூலமாக வாணிபம் செய்துவந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பயிற்சிபெற டிரேக்கைஅவரது தந்தை அனுப்பி வைத்தார். இளைஞன் டிரேக்கின் நடத்தை கப்பலின் எஜமானுக்கு மிகவும் திருப்தியை அளித்தது.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_டிரேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது