கிறீஸ் மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{current}}
[[படிமம்:Greace man.jpg |மர்ம மனிதன் என பொது மக்களால் நையப்புடையப்பட்டு வீழ்ந்திருக்கும் ஒருவர்|thumb|right]]
'''கிறீஸ் மனிதன்''', (''மர்ம மனிதன்'' அல்லது ''க்ரீஸ் பூதம்'', ''Grease devil'') எனும் பெயரில் [[இலங்கை]]யில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் பயங்கர நிகழ்வுகளாகும்.
மர்ம மனிதன் அச்சுறுத்தல்களின் போது
மர்ம மனிதன் எனப்படுவோர் பொது மக்களை
[[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]], மலையகம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளினால் மக்கள் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். இச்சம்பவங்கள் [[2011]] ஆம் ஆண்டு [[சூலை 2011|சூலை]]யில் ஆரம்பித்து [[ஆகத்து 2011|ஆகத்து]] மாதத்திலும் பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்துவிடும்.
மக்களிடையே பேசப்பட்டுவரும் கிரீசு மனிதன் எனும்
==வதந்திகள்==
க்ரீஸ் பூதங்கள் எனப்படும் மர்ம மனிதர்கள் பற்றிய வதந்திகள் 2011 சூலை இறுதிப் பகுதியில் பரவ ஆரம்பித்து. ஆகத்து நடுப்பகுதியில் உச்சநிலையை அடைந்தது. ஆரம்பத்தில் க்ரீஸ் களிம்புகளைப் பூசிக்கொண்டு சில மர்ம மனிதர்கள் இரவு நேரங்களில் கிராமப் புறங்களில் நடமாடுவதாகவும் இவர்கள் பெண்களுடன் தகாத முறையில் நடக்க எத்தனிப்பதாகவும் வதந்திகள் பரவின.அதைத் தொடந்து இந்த மர்ம மனிதர்கள் பெண்களின் முகம், மற்றும் மார்பகப் பகுதிகளை நகங்களால் அல்லது கூரிய ஆயுதங்களால் காயப்படுத்துவதாக வதந்திகள் பரவின. இரவு நேரங்களில் வீட்டிலுள்ளவர்களை வெளியே எடுப்பதற்காக வெளியிலுள்ள நீர்க் குழாய்களில் தண்ணீர்த் திறந்து விடுவதாகவும் கதவுகளைத் தட்டுவதாகவும் இந்த வதந்திகள் அமைந்திருந்தன. இன்னும் ஒரு சாரார் இது இராணுவ பயிற்சி நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் ஒரு விடயம் என்றும் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இத்தகைய வதந்திகளால் இலங்கையின் பல மாவட்டங்களிலும் கிராமப் புற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவ்வாறாகத்தாக்குதலுக்கு உள்ளான சில பெண்களும், மர்ம மனிதர்களைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான சில பெண்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.<ref>[http://www.thinakkural.com/news/all-news/local/8420--q------.html அக்கரப்பத்தனையில் "மர்ம மனிதன்' பீதி ஐந்து பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி], தினக்குரல், ஆகத்து 13, 2011</ref>
==இளைஞர்களும் ஆண்களும் காவல்==
வீடுகளினுள் பெண்களை அமர்த்திவிட்டு இளைஞர்களும், ஆண்களும் இரகசியமாக தத்தமது வீடுகளிலும் பிரதேசங்களிலும் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பங்களில் சில மர்ம மனிதர்களின் நடமாட்டம் ஏற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு இளைஞர்களால்
==முஸ்லிம் கிராமங்கள் பாதிப்பு==
கிறீஸ் மனிதனின் ஊடுருவல் குறித்து கிராமங்கள் தோறும் செய்திகள் பரவியமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரமழான் மாதமாக இது இருப்பதனால் இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிலை கண்டி மாவட்டத்தில் அக்குறணை, புளுகோஹத்தென்ன, நீரெல்ல, குருகொட, அலவதுகொடை போன்ற பிரதேசங்களிலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
|