[[படிமம்:Alveoli.svg{{mergeto|thumb|right|250px|வளிமப்வாயுப் பரிமாற்றம் பட விளக்கம்]]}}
[[நுரையீரல்]]களைக் காற்று அடைந்தவுடன் '''வாயு பரிமாற்றம்''' (Gas exchange) நிகழும். நுரையீரல் தமனியின் தந்துகிகள் மூச்சுச் சிற்றறையின் சுவரினை ஒட்டியிருப்பதால் எளிதில் வாயு மாற்றம் ஏற்படலாம். மிகை அழுத்தத்திலிருந்து குறைவான பகுதியழுத்தமுள்ள பகுதிக்கு ஆக்சிஜனும் கார்பன் டை ஆக்சைடும் பரவும். இருபுறம் அழுத்தம் சமநிலைப்படும் வரையிலும் பரவல் ஏற்படும்.
இந்நிகழ்ச்சி ஓர் எளிய இயல்பு செயலாகும். இதற்கென ஆற்றலுடன் சுரத்தல், கடத்துதல் போன்றவை தேவையில்லை. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அழுத்தம் அதிகம். அவ்வழுத்தம் 20-25% (PO<sub>2</sub> 140 மிமி Hg) எனும் அளவிலும் கார்பன்டைஆக்ஸைடு மிகக்குறைவாக 0.04% அளவிலும் உள்ளது.
'''வாயுப் பரிமாற்றம்''' அல்லது '''வளிமப் பரிமாற்றம்''' என்பது [[நுரையீரல்|நுரையீரலின்]] ஒரு முக்கிய பணியாகும். இது [[காற்று|காற்றில்]] உள்ள [[பிராணவாயு]]வை (உயிர்வளியை, ஆக்ஸிஜனை ) [[இரத்தம்|இரத்தத்தில்]] சேர்ப்பதும் இரத்தத்தில் உள்ள [[கரியமிலவாயு]]வை (கரிமக்காடி வளியை, கார்பன்-டை-ஆக்ஸைடை) பிரித்து [[உடல்|உடலிலிருந்து]] வெளியேற்றுவதுமாகும்.
மூச்சுச் சிற்றறையில் Po<sub>2</sub> (ஆக்ஸிஜன் பகுதி அழுத்தம்) 100 மி.மீ. Hg அளவிலும் சிறைகளின் இரத்தத்தில் 40 மி.மீ. Hg எனும் அளவிலுமாக அமைந்திருக்கும். அவ்வழுத்த வேறுபாட்டால் O<sub>2</sub> இடம் பெயரலாம். சிறைகளின் இரத்தத்தில் Po<sub>2</sub> பகுதியழுத்தம் 46 மி.மீ. Hg எனும் அளவிலும் அதே வேளையில் மூச்சுச் சிற்றறையினுள் 6 மி.மீ. Hg (0<sub>2</sub> ன் 1/10 பகுதி) எனும் அளவிலுமிருக்கும். இவ்வேறுபாட்டால் Po<sub>2</sub> வெளியேறும். இவ்வெளியேற்றத்தின் வேகம் ஆக்ஸிஜனை விட 20 மடங்குகள் இருக்கும்.
[[வளிமம்|வளிமப்]] பரிமாற்றம் என்பது பொதுவாக [[உயிரினம்|உயிரினங்கள்]] தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத [[வளிமம்|வளிமப்]] பொருளான [[பிராணவாயு|பிராணவாயுவை]] (உயிர்வளியை, ஆக்ஸிஜனை) உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொருளாய் உள்ள கரியமிலவாயுவை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை (ஒரு செல்) உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றைக் கண்ணறை (ஒரு செல் கொண்ட) உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது கண்ணறையைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற [[பாலூட்டி]] [[விலங்கு]]களில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, [[மூச்சுக்குழாய்]] வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள பிராணவாயு மெல்லிய அழுத்த வேறுபாடால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் (PO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராணவாயுவானது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்ததில் கலக்கின்றது. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO<sub>2</sub> (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கரியமிலவாயு வெளியேற்றப்படுகின்றது. இப்படி பிராணவாயுவை ஏற்றுக் கொண்டு கரியமிலவாயுவை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும்.