[[Image:LTTE Black Tiger Picture Gallery 2004.jpg|thumb|300px|கரும்புலிகளின் படத்தொகுப்பு, இடது பக்க மேல் மூலையில் இருப்பது கொலின், முதல் கடற்கரும்புலித் தற்கொலை போராளி]]
'''மறைமுகக் கரும்புலிகள்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் [[கரும்புலிகள்]] என்ற பெயரால் அழைக்கப்படுவர். வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே 'மறைமுகக் கரும்புலிகள்'.
'''கரும்புலிகள்''', [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள். [[1987]] [[ஜூலை 5]] முதல் [[2007]] [[ஜூன் 27]] வரை 322 கரும்புலிகள் [[கடல்|கடலி]]லும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.<ref>[http://www.eelampage.com/?cn=32446 புதினம்]</ref>. பெரும்பாலானோர் [[இலங்கை]]யில் எல்லைக்குள் மரணமடைந்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா]] கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.
==கரும்புலிகளின் படைப்பிரிவுகள்==
==மறைமுகக் கரும்புலிகள் பற்றிய ஒரு பாடல்==
[[புதுவை இரத்தினதுரை]] எழுதியது.
*[[தரைக் கரும்புலிகள்]]
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில<br />
*[[கடற் கரும்புலிகள்]]
வேங்கைகள் முகவரி அறிவதில்லை<br />
*[[வான் கரும்புலிகள்]]
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்<br />
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை<br />
==மேலும் பார்க்க==
காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்<br />
* [[கரும்புலிகள் தினம்]]
கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு<br />
வாழும் தலைமுறை சாகும் கரும்புலி<br />
வாழ்வை அறிவதுமில்லை -இவர்<br />
வாசம் புரிவதுமில்லை<br />
==உசாத்துணை==
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே<br />
<references />
கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு<br />
தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்<br />
சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்<br />
தோழர் நெருப்பென ஆவார்<br />
நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி<br />
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்<br />
விடிவினுக்காகவே இடியென எதிரியின்<br />
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்<br />
மூச்சும் பெரும் புயலாகும்.<br />
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் படையணிகள்]]
|