கோபால கிருஷ்ண கோகலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pl:Gopal Krishna Gokhale |
சி clean up |
||
வரிசை 13:
== பின்னணி மற்றும் கல்வி ==
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று [[மஹாராஷ்டிரா]]வின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர்.
பல்கலைக்கழக [[கல்வி]]யைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.<ref>
== இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை ==
சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே 1889 ஆம் ஆண்டில் [[இந்திய தேசிய காங்கிரஸ்]]சின் உறுப்பினரானார். பால கங்காதர் திலகர், [[தாதாபாய் நௌரோஜி]], பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய் மற்றும் [[அன்னி பெசன்ட்]] போன்ற இதர சமகாலத்திய தலைவர்களுடன் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத் துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார். அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். கோகலே அயர்லாந்து<ref>
திலகருடனான கோகலேவின் முதல் பெரும் எதிர்ப்படுதல் அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே மற்றும் அவருடைய திறந்த மனப்பான்மையுடைய கூட்டாளிகள், தங்களுடைய சொந்த இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினர். அந்தச் சட்டம் தீவிரமாக இல்லாதபோதும், திருமண ஒப்பந்தத்தைப் பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாக மட்டுமே உயர்த்த எண்ணியிருந்தபோதிலும் திலகர் அதை ஒரு பெரும் விஷயமாக ஆக்கினார்; குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை அவர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். திலகருக்கோ அத்தகைய மறுமலர்ச்சி நடவடிக்கைகள் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்படுதல் பிடிக்கவில்லை, ஆனால் அவற்றை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே தங்கள் மீது இவற்றை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்கள் அன்றைய நாளை வென்று அந்த மசோதா பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆனது.
1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்து, 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்குள் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் (பிந்தையது இப்போது அரசியல்ரீதியாக சரியான சொல்லான, 'தீவிரமான தேசியவாதிகள்' என்னும் சொல்லால் அறியப்படுகிறது). திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், ஆனால் கோகலேவோ ஒரு மிதமான [[மறுமலர்ச்சி]]யாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னர் இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.
== இந்தியச் சேவகர்கள் அமைப்பு ==
1905 ஆம் ஆண்டில் கோகலே [[இந்திய தேசிய காங்கிரஸ்]]சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், இது அவருடைய இதயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த, குறிப்பாக இந்தியக் கல்வியின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கானது. கோகலேவுக்கு, இந்தியாவில் உண்மையான அரசியல் மாற்றம் என்பது புதிய தலைமுறை இந்தியர்கள் தங்களுடைய நாட்டிற்கும் மற்றும் ஒருவர் மற்றவர்களிடம் காட்டும் உள்நாட்டு மற்றும் தாய்நாட்டு பற்றுக்கான கடமைக்கான கல்வியைப் பெறும்போதுதான் சாத்தியம் என எண்ணினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், இந்த அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். இந்தியச் சேவகர்கள் அமைப்புக்கான அரசயலமைப்பின் முன்னுரையில் கோகலே இவ்வாறு எழுதினார், "இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்." <ref>
கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.
வரிசை 34:
== ஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர் ==
மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார், இதில் இந்தியா பற்றிய அறிவாற்றலும் புரிதலும் மற்றும் சாதாரண இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் உள்ளடங்கியது. 1920 ஆம் ஆண்டுக்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார். காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.<ref>
== கோகலே நிறுவனம் ==
வரிசை 53:
* எம்.கே.காந்தி: ''மை ஆட்டோபையோகிராபி ஆர் தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத்'' (1929) ஐஎஸ்பின் 81-7229-008-X; மற்றும் ஐஎஸ்பின் 0-8070-5909-9.
* [http://www.gandhi-manibhavan.org/eduresources/article3.htm எம்.கே.காந்தி, "கோகலே, மை பொலிடிகல் குரு," (பிப்ரவரி 19, 1918) ''கலெக்டெட் வர்க்ஸ் ஆஃப் மஹாத்மா காந்தி'' v. XIV. ஆன்லைனிலும் இருக்கிறது.]
* ஸ்டான்லி வோல்பெர்ட், ''ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்,'' ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிடி பிரஸ் (1984); (2006). ஐஎஸ்பிஎன் 0-19-577389-6.
* டீ.பி.மத்தூர், ''கோகலே: எ பொலிடிகல் பையோகிராபி: எ ஸ்டடி ஆஃப் ஹிஸ் சர்வீசஸ் அண்ட் பொலிடிகல் ஐடியாஸ்,'' பாம்பே, மானாக்ட்லாஸ் (1966)
* ஜான் எஸ். ஹாய்லாண்ட், ''கோபால கிருஷ்ண கோகலே: ஹிஸ் லைஃப் அண்ட் ஸ்பீச்சஸ்,'' கல்கட்டா (1933); ரூபா (2003) ஐஎஸ்பின் 8129102021
* பி.ஆர்.நந்தா, ''கோகலே: தி இண்டியன் மாடரேட்ஸ் அண்ட் தி பிரிட்டிஷ் ராஜ்,'' பிரின்ஸ்டன் (1977); ஆக்ஸ்ஃபோர்ட் (1998) ஐஎஸ்பின் 0195647513
== புற இணைப்புகள் ==
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
|