ஜோசே சரமாகூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிமாற்றல்: ru:Сарамаго, Жозе
சி →‎வரலாறு: clean up
வரிசை 26:
 
== வரலாறு ==
சரமாகூ, [[போர்த்துக்கல்]] நாட்டின் தலைநகரான [[லிஸ்பன்|லிஸ்பனில்]] இருந்து வடகிழக்கில் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் [[ரீபாட்டேஜோ]] மாகாணத்தில் உள்ள சிறிய ஊரான [[அசின்ஹாகா]]வில் பிறந்தார். இவரது [[குடும்பம்]] நிலமற்ற குடியானவக் குடும்பம். இவர் தந்தையார் ஜோசே டி சோசா (José de Sousa), தாயார் மரியா டி பியடாடே (Maria de Piedade). ''சரமாகூ'' என்பது ஒரு காட்டு [[மூலிகை]]ச் செடியைக் குறிக்கும் ஒரு சொல். இது இவருடைய தந்தையின் குடும்பத்தினருக்கு வழங்கிய பட்டப் பெயர். ஆனால் தவறுதலாக [[பிறப்புப் பதிவு|பிறப்புப் பதிவின்போது]] இவர் பெயருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1924ல் சரமாகூவின் குடும்பம் லிஸ்பனுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே இவரது தந்தை [[காவல்துறை]]யில் ஒரு காவலராகப் பணியில் சேர்ந்தார். இவர்கள் தலைநகருக்குப் போன சில மாதங்களில் சரமாகூவின் [[அண்ணன்]] பிரான்சிஸ்கூ இறந்தார். சரமாகூ ஒரு சிறந்த [[மனவன்|மாணவனாக]] இருந்தும் அவரது பெற்றோருக்கு அவரை கிராமர் பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை. அதனால் அவரை 12 [[வயது|வயதில்]] தொழில்நுட்பப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கிருந்து படிப்பை முடித்து வெளியேறியதும், [[தானுந்து]] பழுதுபார்ப்பவராகப் பணியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆகவும், அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றினார். ஒரு செய்தி [[நாளேடு]] ஒன்றின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாக அப்பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. மீண்டும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின், ஒரு எழுத்தாளராகத் தனக்கு வேண்டிய [[வருமானம்|வருமானத்தைப்]] பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையை எய்தினார். சரமாகூ 1944 ஆம் ஆண்டில் இல்டா ரேயிஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களது ஒரே [[பிள்ளை]] 1944 ஆம் ஆண்டு பிறந்தது. 1988 ஆம் ஆண்டு, அவரது நூல்களை [[ஸ்பானிய மொழி]]யில் மொழிபெயர்த்தவரான பத்திரிகையாளர் பிலார் டெல் ரியோ என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
 
சரமாகூ தனது ஐம்பது வயதின் நடுப்பகுதியில் இருந்தபோதே அவருக்கு உலக அளவிலான கவனம் கிடைத்தது. இவரது வெளியீடான ''[[பால்தாசர் அண்ட் பிளிமுண்டா]]'' என்னும் நூலே இவருக்கு உலக அளவில் வாசகர்களை உருவாக்கியது. இந்தப் [[புதினம்|புதினத்துக்கு]] போர்த்துக்கேய "பென் கிளப்"பின் விருதும் கிடைத்தது. சரமாகூ 1969 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயப் [[பொதுவுடமை]]க் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இவர் ஒரு [[இறைமறுப்பு|இறைமறுப்பாளரும்]] ஆவார். இவரது கருத்துக்கள், சிறப்பாக, ''யேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி நற்செய்தி'' என்னும் அவரது நூல் வெளுவந்த பின்னர், போர்த்துக்கலில் பெருமளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. நாட்டின் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] சமூகத்தினர் சரமாகூ யேசுவைத் தவறு செய்யக்கூடிய மனிதனாகக் காட்டியதையிட்டுப் பெரும் கோபமடைந்தனர். போர்த்துக்கலின் பழமைவாத அரசு, இவரது நூல் கத்தோலிக்கரைப் புண்படுத்துகிறது என்று கூறி அதனை [[ஐரோப்பிய இலக்கியப் பரிசு]]க்குப் போட்டியிடுவதைத் தடை செய்யும் என்பதனால், அவரும் மனைவியும் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேக்கு இடம் பெயர்ந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜோசே_சரமாகூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது