| birth_date ={{Birth date and age|1945|3|31|df=y}}
வரி 36 ⟶ 34:
}}
'''மீரா குமார்''' (பிறப்பு;[[மார்ச் 31]], [[1945]]) இந்திய அரசியல் வாதியும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] [[மக்களவை]] உறுப்பினரும் ஆவார். முன்னாள் [[துணைப் பிரதமர்|துணைப் பிரதமரும்]] மிக முக்கியத் [[தலித்]] தலைவர் [[பாபு ஜெகஜிவன்ராம்]] மற்றும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான [[இந்திராணி தேவி]] தம்பதியர்களின் புதல்வியும் ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்தில்]] வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள். இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்றத் தேர்தலின்]] மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது இந்திய நாடாளுமன்றத்தின் [[இந்திய மக்களவைத் தலைவர்|மக்களவைத் தலைவராக]] பொறுப்பு வகிக்கின்றார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார்.