சோழ மன்னன் படையில் சிறந்து விளங்கியதற்காக 'ஏயர்கோன்' என்னும் விருதினைப் பெற்றவர் [[ஏயர்கோன் கலிக்காம நாயனார்|கலிக்காமர்]]. போர் இல்லாத காலத்தில் பெருமங்கலம் என்னும் ஊரில் வேளாண்மை செய்துவந்தார். இவரது குலத்தெய்வம் திருப்புன்கூர் சிவன்.
சுந்தரமூர்த்தி நாயனார் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்கச் சிவனையே தூதாக அனுப்பினார் என்னும் செய்தி கேட்டு மனம் நொந்தார். சுந்தரர்மீது வெறுப்புக் கொண்டிருந்தார். கலிக்காமருக்கு வயிற்றுவலி. இதனை மருத்துவர்களால் தீர்க்க முடியவில்லை. சுந்தரமூர்த்தியால்தான் தீர்க்கமுடியும் என்னும் நிலை வந்தது. சுந்தரமூர்த்தியும் கலிக்காமர் நோயைப் போக்க வந்துகொண்டிருந்தார். கடவுளைத் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட தொண்டனால் நலமடைய விரும்பாமல் சாகத் துணிந்து கலிக்காமர் தன் வயிற்றைத் தானே கிழித்துக்கொண்டார்.