ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==நிகழ்வின் பின்புலம்==
 
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான [[மணியம்மை]]யை திருமணம் செய்து கொண்டார். இராஜாஜியிடம் அறிவுரை கேட்டுவிட்டுதான் பெரியார் திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது.{{cn}} இராஜாஜி காங்கிரசுகாரர் என்பதை விடவும் பார்ப்பனர் என்றே திராவிடத் தலைவர்கள் வருந்தினார்கள்.{{cn}} திராவிடத்தின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்களிடம் யோசனை கேட்டது சரியல்ல என முழங்கினார்கள். எனினும் பெரியார் தான் செய்தது சரியென்றே கடைசி வரை வாதாடினார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, [[ஈ. வி. கே. சம்பத்|ஈ.வி.கே. சம்பத்]] ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர்.
 
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “[[பணக்காரக் குடும்பம்]]” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.