கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| timezone = +6 GMT
| type = சுடப்படல்
| fatalities = 158174
| injuries =
| perps =
வரிசை 17:
| weapons = துப்பாக்கிகள்
}}
'''கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்''' அல்லது '''வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்''' என்பது [[1990]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 5]] ஆம் நாள் [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] [[கிழக்குப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழகத்தில்]] தஞ்சமடைந்திருந்த [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] அகதிகள் 158 பேர் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரால்]] சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன<ref name=blacksep>{{cite web|url=http://www.highbeam.com/doc/1G1-107266313.html|title=
Sri Lankan Tamil rebels commemorate civilian killings in eastern town|accessdate=2007-07-10|work= Xinhua News Agency}}</ref>. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது<ref name=dissap/>, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை<ref name=dissap>{{cite web | url = http://www.disappearances.org/mainfile.php/frep_sl_ne/78/Cyberspace | title = Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district }}</ref><ref name=hrw>{{cite web |url=http://www.hrw.org/wr2k2/asia10.html
|title=HRW report - Sri Lanka|accessdate = 2007-02-02 |work=[[HRW]]}}</ref><ref name=uthr>{{cite web|url=http://www.uthr.org/Reports/Report7/chapter4.htm#h|title= UTHR(J) report on the Eastern University Massacre}}</ref>.
வரிசை 28:
 
{{Quotation|"ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]] ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது<ref name=dissap/>) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்<ref name=uthr/>."}}
 
==முகாம் மூடப்படல்==
முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது. பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்<ref name=uthr/>.
 
==நினைவு நாள்==