[[கணிதம் |கணிதத்தில்]] ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், முதலியவை எண்பத்து பத்தின்என்ற எண்ணின் முதல் நான்கு அடுக்குகளாகும். [[கிரேக்கம் |கிரேக்ககாலத்திய]] கணிதமுறையில் [[வடிவவியல் |வடிவவியலிலும்]] இன்னும் சில கணிதப் பிரிவிலும் கணிசமான கண்டுபிடிப்புகள் இருந்தாலும், எண்களைக் குறிப்பதிலும், எண்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதிலும் ஒரு எளிதான குறிமானம் இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, குறிப்பாக [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] முதலிய [[இதிகாசம்|இதிகாசங்கள்]] தோன்றுமுன்பே, இந்திய ஆவணங்களில் எண் பத்தின் ''பதினேழு'' அடுக்குகளுக்குத் தனிப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. '''வடமொழியில் பத்தின் அடுக்குகளுக்குள்ள''' இப்பெயர்களைப் பட்டியலிடுகிறது, [[லீலாவதி]] என்ற கணிதநூல்.