''[[வடமொழியில் பத்தின் அடுக்குகள் |பத்மம்]]'' என்றால் லட்சம்-கோடி, அதாவது 10<sup>12</sup>.[[கல்பகாலம் |பிரம்மாவின் ஒரு பகல்]] 432 கோடி மனித ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்து 824 x 10<sup>7</sup> ஆண்டுகள். ஒவ்வொரு பகலிலும் அவர் படைப்பு தொடங்கி, அவருடைய இரவு நெருங்கும்போது எல்லா படைப்புகளும் அவரிடம் ஒடுங்குகின்றன. இதனால் முன் படைப்பில் இருந்தவை, நடந்தவை யாருக்கும் தெரியவோ நினைவில் வரவோ வாய்ப்பில்லை. ஏதோ; சில அபூர்வமான ரிஷிகளுக்கு சில சமயம் ஓரிரண்டு சம்பவங்கள் தெரியவருகின்றன.; இப்படி நினைவு கூர்ந்து முன் கல்பங்களில் நடந்து முடிந்த சம்பவங்கள் சில புராணங்களில் சொல்லப்படுகின்றன என்பது நம்பிக்கை. பிரம்மாவின் நீண்ட ஆயுளில் இப்படி சில கல்பங்களைப் பற்றித்பற்றி தெரிந்தாலும்சொல்லப்பட்டாலும் அதிகப்படியாக பத்து அல்லது பதினைந்து பழைய கல்பங்களைத் தாண்டி ஒரு புராணமும் பேசுவதில்லை. இந்தக் கணக்கீட்டின்படி 10<sup>12</sup> ஆண்டுகள் என்ற காலவரையறையைத்தொட்டவர் இறைவனைத்தவிர வேறு யாருமே இருக்கமுடியாது. ''பத்மம்'' ஆகிற காலவரையறைக்கும் காரணமாகி, காலம் என்ற கமலத்தையே தன் உந்தியில் வைத்திருப்பவர், -- என்ற பொருள் 'பத்மநாபன்' என்ற சொல்லிற்கு ஒரு பொருத்தமான பொருள்.