இந்து சமயத்தில் [[கண்ணன் |கண்ணனின்]] அவதாரக் கதைகளைச் சொல்வது [[வியாசர்]] எழுதிய [[ஸ்ரீமத் பாகவதம்ஸ்ரீமத்பாகவதம் |பாகவதபுராணம்]]. கண்ணனின் அண்ணன் பலதேவர் என்றும் அழைக்கப்படும் [[பலராமர்]]. இவர் ககுத்மி என்ற அரசனின் மகள் ரேவதியை மணந்ததில் ஒரு விசித்திரம் உள்ளது. ஏனென்றால் ககுத்மியும் ரேவதியும் தோன்றியது [[கல்பகாலம் |வைவஸ்வத மன்வந்தரத்தின்]] முதல் மகாயுகத்தில். பலராமர் தோன்றியது அதே மன்வந்தரத்தில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 28-வது மகாயுகத்தின் துவாபர யுகத்தில்.இடையில் 27 x 43,20,000 மனித ஆண்டுகள் உள்ளன. இந்தப் புராணக் கதை ஸ்ரீமத்பாகவதத்தில் 9-வது ஸ்கந்தம் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இது 1985 இல் உலகில் எல்லோரையும் ஈர்த்த [[Back to the Future]] என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நினைவூட்டக்கூடியது.