கிறிஸ்டியன் டாப்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
கிறிஸ்டியன் டாப்ளர் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் [[வியன்னா]] மற்றும் சல்ஸ்பெர்கில் [[வானியல்]] மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். [[பிராகா]] பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.
 
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை [[1845]] -ல் [[டாப்ளர் விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் [[செக் குடியரசு|செக்கோசுலவாக்கியா]]வில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது [[கணிதம்]], [[இயற்பியல்]], [[இயந்திரவியல்]] மற்றும் [[வானியல்]] சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். [[1848]]-ல் [[வியன்னா]]வுக்கு குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். [[மரபியலின்|மரபியல்|மரபியலின்]] தந்தை எனப்படும் [[கிரிகொர் மென்டல்]] வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்.
 
== முழுப்பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியன்_டாப்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது