தெ. இரா. மகாலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[மதுரை மாவட்டம்]], [[சோழவந்தான்|சோழவந்தானை]] அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம்<ref name="virakesari">பாலா சங்குப்பிள்ளை, ''திரையுலகில் மூவேந்தர்களுடன் போட்டியிட்டு முதன்மையாகத் திகழ்ந்த ரி.ஆர்.மகாலிங்கம்'', [[வீரகேசரி]], சூன் 4, 2011</ref> ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழ வந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கம் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் [[எஸ். சி. கிருஷ்ணன்]] அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் [[எஸ். ஜி. கிட்டப்பா]], மகாலிங்கம், [[எஸ்.சி.கிருஷ்ணன்]], [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] மற்றும் [[டி. எம். செளந்தரராஜன்]] வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
 
1937ல்பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்து போன [[ஏ. வி. மெய்யப்பச் செட்டியார்|ஏவிஎம்]], தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ''[[நந்தகுமார்]]'' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடிக்க கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெட்கட்ராமன் இசை அமைத்த பாடலை பாடியபடியே அறிகமானார் மகாலிங்கம். [[கிருஷ்ணர்|கிருஷ்ணரை]]ப் பற்றி தமிழ், [[இந்தி]] மற்றும் [[மராத்தி]] மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் [[பிரகலாதா]], சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
 
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவலக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தெ._இரா._மகாலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது