மகனாகிய கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், '''வலிமைமிகு இறைவன்''', என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். ([[எசாயா (நூல்)|எசாயா]] 9:6) என்று விவிலியம் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறது.
 
"வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது." ([[தானியேல் நூல்|தானியேல்]] 7:13-14)
கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியாக, பின்வரும் செய்தி காணப்படுகிறது: "நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்." (தொடக்க நூல் 22:17-18)
 
கடவுள் தனது மறைபொருளான பெயரை, '''யாவே''' அல்லது '''இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே''' ([[விடுதலைப் பயணம்]] 3:14) என்று வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
[[பழைய ஏற்பாடு]] ஆண்டவரின் இரக்கத்தையும் நீதியையும் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்." (விடுதலைப் பயணம் 34:6-7)
 
==[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]]==
"https://ta.wikipedia.org/wiki/மகனாகிய_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது