கணியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கணியர்''' என்பவர்கள் தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர். அரசர்களின் அவையில் பெருங்கணிகள் இருந்தனர்.<ref>சிலம்பு - நடுகற்காதை, நீர்ப்படைக்காதை, வேட்டுவ வரி</ref>
 
==சேரன் செங்குட்டுவனுடன் இருந்த கணி==
* வஞ்சியில் தன் விருப்பப்படி அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தைச் செங்குட்டுவன் காணச் சென்றபோது அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக் கம்மியர் ஆகியோரை உடன் அழைத்துச் செல்கிறான்.<ref> சிலப்பதிகாரம் நடுகற்காதை</ref>
* செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லைக் கங்கையில் நீராட்டியபின்னர் பாடி வீட்டில் தங்கியிருந்தபோது மாடலன் மாதவி துறவு, பாண்டிநாட்டில் வெற்றிவேற் செழியன் ஆட்சி முதலான செய்திகளைச் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கிறான். அப்போது செங்குட்டுவன் வானத்துப் பிறையைப் பார்க்கிறான். அப்போது அங்கிருந்த கணியன் வஞ்சி நீங்கி எண்ணான்கு மதியம் சென்றது எனக் கூறுகிறான். <ref>சிலப்பதிகாரம் நீர்ப்படைக்காதை</ref>
==புள் நிமித்தம் சொன்ன கணி==
* வேட்டுவர் கரந்தைப் போரில் வென்று கவர்ந்து வந்த ஆனிரைகளை முனபு தனக்குக் கடனாகக் கள்விற்ற மூதாட்டின் முற்றமும், புள் பார்த்துச் சொன்ன கணியின் முற்றமும் நிறையும்படி நிறுத்தினார்களாம் <ref>சிலப்பதிகாரம் வேட்டுவ வரி</ref>
 
 
 
;கணியர் பற்றி சங்க இலக்கியம்
"https://ta.wikipedia.org/wiki/கணியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது