தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
இந்த தளம் இலங்கையின் இனமுரண்பாடு, மனிதவுரிமை மீறல்கள், அரச வன்முறைகள் போன்றவற்றை அறிய முனையும் உலகின் ஏனைய சமூகத்தவரிடையேயும், உலகெங்கும் உள்ள தமிழர்களிடையேயும் பிரசித்திப்பெற்ற தளமாக மாற்றம் பெற்றது. இந்த தளத்தில் வெளியிடப்படும் செய்திகள் அநேகமான செய்தி ஊடகங்கள் போன்று அழிக்கப்படாமல் திகதி வாரியாக ஆவணப்படுத்தப்படுவதால், காலம் கடந்த செய்திகளையும் உடனடியாக எவரும் எளிதாக பார்வையிடும் வசதியினையும் கொண்டிருப்பதால், புலம்பெயர்ந்து வாழ்வோரின் பல்வேறு கோரிக்கைகளின் போது இத்தளத்தின் செய்திகள் மேற்கோளாக காட்டப்படுவதால், இத்தளம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு பயன்மிக்கதாக அமைந்து வருகின்றது.
 
அதேவேளை இலங்கை அரசு, இலங்கை ஊடக முடக்கத்தை ஏற்படுத்தி, உண்மை செய்திகளை உலகறிய விடாமல், உண்மைகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கியும், ஊடகவியலாளர்களை கொலைசெய்தும், மிரட்டியும் வந்தமுடக்கி வேளையில், தமிழ்நெட் இணையத்தளம் இலங்கை அரசத் தரப்பினருக்கு பெறும் சவாலாக இருந்தது. இதனால் தமிழ்நெட் இணையத்தளம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] தளம் அல்ல என்பதை அறிந்தப் போதும், புலிகளின் சார்பான ஒரு தளமாக, தமது ஊடகங்களூடாக பரப்புரைகளைஇலங்கை செய்துஅரசால் வந்ததுசித்தரிக்கப்பட்டது.
 
தமிழ்நெட் தளத்தில் பிரதான ஆசிரியரான சிவராம், புலிகளின் எதிர் கொள்கைகளைக் கொண்ட [[புளொட்]] இயக்கத்தின் முன்னார் உறுப்பினராகவும், இலங்கையின் புகழ்பெற்ற செய்தியாளராக இருந்தும், அவரை ஒரு புலிகளின் ஆதரவாளராக இணங்காட்டி படுகொலையும் செய்யப்பட்டது. தற்போதும் தமிழ்நெட் தளம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், அத்தளத்தினை புலிகளின் சார்பு தளமாகவும், அதன் செய்திகள் பக்கசார்பு உடையதாகவும் குற்றம் சுமத்தி வருகிறது. அதன் இன்னொரு கட்டச் செயல்பாடாக இலங்கையில் தமிழ்நெட் தளத்திற்கான இணக்கமும் ஒரு காலக்கட்டத்தில் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==தமிழ்நெட்டை இழிவு படுத்தும் செயல்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது