பாலக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சுற்றுலா இடங்கள்: பிழைநீக்கம்
வரிசை 21:
 
இந்நகரம் தமிழக கேரள எல்லையில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. [[பாரதப்புழா]] ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. [[சேலம்|சேலத்தை]] [[கன்னியாகுமரி|கன்னியாகுமரியுடன்]] இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.
==பாலைக் கௌதமனார்==
:சங்ககாலப் பார்ப்பனப் புலவர் [[பாலைக் கௌதமனார்]] இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் [[பல்யானைச் செல்கெழுகுட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனைச்]] சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பாலக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது