விடுதலை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
"விடுதலை பத்திரிக்கை திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
விடுதலை பத்திரிக்கை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆகும். நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப்பட்டு பிறகு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. சூன் 1, 1935ல் வாரம் இருமுறை ஏடாக காலணா விலையில் வெளிவந்தது. சூன் 1, 1937 முதல் நாளேடாக அரையணா விலையில் தந்தை பெரியார் பொறுப்பில் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் சென்னையில் 14, மௌண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு குடியரசு பணிமனையில் விடுதலை அலுவலகத்த்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது.இதில் டி.ஏ.வி நாதன், பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார், கி.வீரமணி ஆகியோரு ஆசிரியராக பணியாற்றியுள்ளனர். தற்போதைய ஆசிரியராக திராவிடர் கழக பொது செயலாளர் கி. வீரமணி அவர்கள் இருந்து வருகிறார்கள்.
==பத்திரிக்கையைப் பற்றி அறிஞர்கள்==
===தந்தை பெரியார்===
ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிக்கை விடுதலை. விடுதலைப் பத்திரிக்கை இல்லாதிருந்திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியில்லாமல் போயிருக்கும். (விடுதலை 16.6.1964)
===அறிஞர் அண்ணா===
தனது இனத்தைத் தட்டி எழுப்ப தன் இனத்தின் இழிவைப் போக்க தன் இனத்தார் அகப்பட்டுள்ள வஞ்சக வலையைக் கிழித்தெறிய பாடுபடும் ஒரே தினசரி விடுதலையே.
===கலைஞர் கருணாநிதி===
நான் முதலில் படிக்கும் ஏடு விடுதலையே. அறியாமையிலிருந்து விடுதலை ஆதிக்க வெறியிலிருந்து விடுதலை விடுதலைக்காக களத்தில் வாளேந்தி கடும் போர் புரிந்து வரும் விடுதலையே.
===குன்றக்குடி அடிகளார்===
தமிழன் வீடு என்பதற்கான அறிவிப்புப் பலகை விடுதலை
===எஸ்.ஏ.டாங்கே===
கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்பும்-உண்மையான தலைவர் பெரியாரும், விடுதலையுமே.
===ஏ.கே. கோபாலன்===
கம்யூனிஸ்டுக் கட்சி அடக்குமுறைக்கு உட்பட்டபோது சனநாயக உரிமைக்காக நிமிர்ந்து நின்று கிளர்ச்சி செய்தது திராவிடர் கழக தோழர்களும் விடுதலையுமே.
===கி.ஆ.பெ. விசுவநாதம்===
விடுதலை நேர்மை உள்ளவர்களுக்கு நீலோற்பல மாலை. விஷமக் காரர்களுக்கு விரியன் பாம்புக்குட்டி.
===பத்திரிக்கையாளர் சோலை===
ரசிய புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர் வாளாக இருந்தது இஸ்காரா (தீப்பொறி). சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது- இன்றும் இருப்பது விடுதலை.
|