விடுதலை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"விடுதலை பத்திரிக்கை திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
விடுதலை பத்திரிக்கை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆகும். நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப்பட்டு பிறகு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. சூன் 1, 1935ல் வாரம் இருமுறை ஏடாக காலணா விலையில் வெளிவந்தது. சூன் 1, 1937 முதல் நாளேடாக அரையணா விலையில் தந்தை பெரியார் பொறுப்பில் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் சென்னையில் 14, மௌண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு குடியரசு பணிமனையில் விடுதலை அலுவலகத்த்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது.இதில் டி.ஏ.வி நாதன், பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார், கி.வீரமணி ஆகியோரு ஆசிரியராக பணியாற்றியுள்ளனர். தற்போதைய ஆசிரியராக திராவிடர் கழக பொது செயலாளர் கி. வீரமணி அவர்கள் இருந்து வருகிறார்கள்.
 
==சமூக மாற்றத்தில் விடுதலை==
1939ம் ஆண்டிலேயே ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தது. இந்தி எதிர்ப்பு போரில் மிக கடுமையான விமர்சனங்களை வைத்தது. இராசாசி கொண்டு வந்த குலகல்வி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளியானது. தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்தது விடுதலை.
 
==தடை==
1987ம் ஆண்டு கடலூர், மதுரை, சிறைகளில் சிறை அதிகாரிகளால் விடுதலைக்கு தடை போடப்பட்டது. உள்துறை தனிச் செயலாளர் அந்த தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் 27.11.1987ல் வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தார்
 
==பத்திரிக்கையைப் பற்றி அறிஞர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விடுதலை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது