'''சஞ்சய் சுப்ரமண்யன்''' (பிறந்தநாள்:பி. [[ஜனவரி 21]], [[1968]]) அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர் ஆவார். இவர் தனது இசை நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் மற்றும் பல்வேறு உலகநாடுகளிலும் நிகழ்த்தியுள்ளார். தனது பாடும் திறனுக்காக பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். கேள்விஞானம் மூலமாக நேர்த்தியான திறமையை ஒரு இசைக்கலைஞன் வெளிப்படுத்தமுடியும் என்பது இவரின் நம்பிக்கை. இவர் மிக எளிமையானவர். மனதில்தோன்றுவதை வெளிப்படையாக பேசுபவர். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர், இந்திய கிரிக்கெட் அணியின் விசிறி ஆவார்.