மாங்குடி மருதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
சங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”.....மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக......” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.
==மாங்குடி மருதனார் தரும் வரலாற்றுச் செய்திகள்==
;ஊர்
:மாங்குடி என்னும் ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ளது. சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார். இவர் மாங்குடி மருதனார். என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.
 
;பாடல்கள்
:அகநானூறு 89,
:குறுந்தொகை 164, 173, 302,
:நற்றிணை 120, 123,
:புறநானூறு 24, 26, 313, 335, 372, 396
:மதுரைக்காஞ்சி
 
இவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.
 
;மதுரைக்காஞ்சி நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்
:மதுரை மாநகரின் கடைத்தெரு, அந்தணர், சமணர், பௌத்தர் முதலானோரின் பள்ளிகள், முதலானவற்றின் சிறப்பு
:தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நெல்லூர் (திருநெல்வேலி), முதுவெள்ளிலை, தலையாலங்கானம், முதலான போர்க்களங்களில் வெற்ற வெற்றிகள்
:உள்நாட்டில் கலகம் செய்த தென்பரதவரை அடக்கியது
:இவனது முன்னோன் நிலந்தரு திருவின் நெடியோன் இருபெரு வேந்தர்களையும், வேளிரையும் ஒருசே6ர வென்றது,
:பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி புணர்கூட்டு என்னும் தமிழ்ச்சங்கம் வைத்திருந்தது
:பொதியமலைக் குற்றாலத்துத் தட்சிணாமூர்த்தியை தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் தொன்முது கடவுள் என் குறிப்பிடுவது
:பெரும்பெயர் நன்னன் ஓணநன்னாள் எனக் கூறுகையில் திருமாலை நன்னன் எனக் குறிப்பிடுவது
 
;பிறபாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள்
:தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்த கடலோரக் குன்றூர்த் தெய்வத்தின்மீது ஆணையிட்டுத் தலைவன் சத்தியம் செய்வது குறுந்தொகை 164
:நான்மறை முதல்வரைக்கஃ கொண்டு வேள்வி செய்தது புறநானூறு 26
:கோதை, குட்டுவன், எவ்வி, பழையன் மாறன், மானவிறல்வேள், வாட்டாற்று எழினியாதன், வாணன், கோசர், மழவர், பற்றிய குறிப்புகள்
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாங்குடி_மருதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது