மரியாவின் காட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
இறைமகன் [[இயேசு கிறித்து|இயேசு]]வின் அன்னை மரியா இறக்கும் தருணத்தில் இருந்தபோது பல்வேறு இடங்களுக்கு உயிர்த்த இயேசுவின் நற்ச்செய்தியை அறிவிக்க சென்றிருந்த திருத்தூதர்கள் இறை ஏவுதலால் எருசலேம் நோக்கி விரைந்தனர். வெகுதூரம் சென்றிருந்த தோமாவைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் அன்னை மரியா மரணம் அடைந்தார். இறந்து அடக்கம் செய்யப்பட்டதும், கடவுள் மரியாவின் ஆன்மாவோடு அவரது உடலையும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார். மரியாவின் மரண வேளையில் அவரது ஆசீரைப் பெற முடியாத திருத்தூதர் [[தோமா (திருத்தூதர்)|தோமா]], மரியன்னையைக் காண வேண்டும் என்று ஆவலோடு விண்ணகத்தை நோக்கி செபம் செய்துகொண்டு இருந்தார். '''கி.பி. 46 ஆகஸ்ட் 22'''ந்தேதி, விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா தோமாவுக்குத் தோன்றி தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்ததுடன் தனது இடைக்கச்சையையும் அவரிடம் வழங்கினார்.
 
==ரோம் காட்சி==
=='''கி.பி. 352 ஆகஸ்ட் 4'''==
[[உரோமை நகரம்|ரோம்]] நகரில் வாழ்ந்த செல்வந்தரான ஜான் என்பவருக்கும், திருத்தந்தை லிபேரியஸ் (352-366) அவர்களுக்கும் அன்னை மரியா '''கி.பி. 352 ஆகஸ்ட் 4''' அன்று காட்சி அளித்தார். மறுநாள் எஸ்குலின் குன்றின் மேல் தான் பனி சூழச் செய்யும் இடத்தில் தனக்காக ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று மரியன்னை அவர்களுக்கு உரைத்தார். ஆகஸ்ட் 5ந்தேதி எஸ்குலின் குன்றுக்கு அவர்கள் சென்று பார்த்தபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பனிமயமாக காட்சி அளித்தது. அன்னை மரியாவால் அடையாளம் காட்டப்பட்ட அந்த இடத்தில், செல்வந்தர் ஜானின் உதவியோடு திருத்தந்தை லிபேரியஸ் தூய மரியன்னை பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். பிற்காலத்தில் திருத்தந்தை 3ம் சிக்ஸ்டஸ் (432-440) அவ்வாலயத்தைப் புதுப்பித்தார்.
 
=='''கி.பி. 1061 செப்டம்பர் 24'''==
"https://ta.wikipedia.org/wiki/மரியாவின்_காட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது