'''பசுந்தாள் உரம்''' [[இயற்கை வேளாண்மை]]யில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [[நைதரசன்|நைட்ரஜன்]] போன்ற மூலப்பொருட்களைமூலப்பொருள், நிலஊட்டலுக்குசேதனப் பொருட்களை நிலஊட்டல் மூலம் [[மண்|மண்ணிற்கு]] வழங்குவதற்கு இம்முறை உதவுகிறது. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நீர் நில மாசுபாடு இம்முறையால் தடுக்கப்படுகிறது.
கொழுஞ்சி, சணப்பை, எருக்களை, புங்கம், நுணா, , வேம்பு, பூசரவு மற்றும் ஆடாதொடா ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பசுந்தாள் உரங்கள் ஆகும். இவற்றுள் கொழுஞ்சி, சணப்பை போன்ற செடிகளைசெடிகள் வேளாண் நிலத்தில் பயிரிட்டுபயிரிடப்பட்டு, அவை வளர்ந்து பூக்கும் முன்னரே அப்படியே உழுது நிலத்துடன் சேர்க்கப்படுகின்றன. பசுந்தாள் உரம் அடுத்த பருவ விளைச்சலில் முன்னேற்றம் தரும் என்று நம்பப்படுகிறது. <ref> [http://agritech.tnau.ac.in/ta/itk/IndigenousTechKnowledge_Oper_ta.html தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - பயிர் சாகுபடி செயல்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு]</ref>