தெருக்கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
தெருவில் நடத்தப்படும் கூத்து '''தெருக்கூத்து''' ஆகும். இது தமிழர்களின் பழங்க்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், [[நாடகம்]], ஆடல், [[பாடல்]] என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.
== கூத்து நடைபெறும் இடம் ==
தெருக்கூத்து நடைபெறும் இடம் '''களரி''' எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில் சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒரு அகன்ற விசுப்பலகை (bench)போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங் கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.
== பின்பாட்டுக் காரர்கள் ==
கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாஅட்டு ஆகும் . ஆடலும் பாடலும் இணைந்த நாட்டிய நாடக்மே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டு பாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும் இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை மிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பர்.
== இசைக்கருவிகள் ==
தெருக்கூத்தில் [[ஆர்மோனியம்]], [[மத்தளம்]], [[தாளம்]], [[முகவீணை]](மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.
== கட்டியங்காரன் ==
== ஆடை அணிகலண்கள் ==
== விதிமுறைகள்==
சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்.
|