யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்''' (''Jaffna Youth Congress'') என்பது [[இலங்கை]]யில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[1924]] ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் [[1926]] ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசாகப் பெயர் மாற்றப்பட்டது.
முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்து அதற்கான நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை யாழ்ப்பாண இளைஞர்
==உறுப்பினர்கள்==
இவ்வமைப்பில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் [[ஹண்டி பேரின்பநாயகம்]], ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" சி. எஸ். நவரத்தினம், ஏ. இ. தம்பர், "ஒரேற்றர்" சுப்பிரமணியம், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் எஸ். குலேந்திரன், [[பி. நாகலிங்கம்]] (பின்னர் [[இலங்கை செனட் சபை|செனட்டர்]]) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபராக இருந்த பி. ஜி. எஸ். குலரத்தின என்பவரை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது<ref name="AT"/>.
==மாநாடுகள்==
|