பொத்துவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
இங்கு [[இயற்கை வளம்|இயற்கை வளங்கள்]] நிறைந்து காணப்படுவது வெளிப்படையானதாகும். [[நெல்]] [[வயல்|வயல்கள்]], [[காடு]], அழகிய [[கடற்கரை|கடற்கரைகள்]], ரம்மியமான [[மலை|மலைகள்]] மற்றும் குளிர்மையான [[நீர் ஊற்று|நீர் ஊற்றுக்கள்]], தேக்கங்கள் என்பன காணப்பட்டு இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன.
 
நெற்பயிர்ச் செய்கையே இந்தப் பிரதேசத்தில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இருந்த போதிலும், [[மறக்கறிமரக்கறி]], [[தென்னை]] மற்றும் [[பழம்|பழங்கள்]] போன்றனவும் வளர்க்கப்பட்டு அவையும் உள்ளக வாழ்வாதாரத்தில் பங்களிப்பு செய்கின்றன. இதேவேளை, விலங்கு வேளாண்மை மற்றும் மீன்பிடி என்பனவும் குறிப்பிடத்தக்களவு [[பொருளாதாரம்|பொருளாதாரத்தில்]] பங்களிப்பு செய்வதோடு, சுற்றுலாத் துறையானது, மிகவும் முக்கியமானதும், அபிவிருத்தி அடையக்கூடிய தகவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.
 
இந்தப் பிரதேசம், [[கடற்கரை]], [[ஆறு]] மற்றும் தேக்கங்களை தன்னகம் கொண்டுள்ளதால் இது மண் வளமிக்க பூமியாக சொல்லப்படுகிறது. தென்னைப் பயிர்ச்செய்கையானது, சிறிய பரிமாணத்தில், கோமாரி, மணற்சேனை, விக்டர் தோட்டம், ஹிதாயா புரம், ஊறணி, உல்லை ஆகிய கரையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு, மறக்கறிச் செய்கையில் பிரதானமாக மிளகாய் பயிரிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொத்துவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது