'''ஜமால் அப்துந் நாசிர் ஹுசைன்''' என்னும் முழுப் பெயர் கொண்ட '''ஜமால் அப்துந் நாசிர்''' (15''Gamal Abdel Nasser'', கமால் அப்துல் நாசர், [[சனவரி 15]], [[1918]] - 28 [[செப்டெம்பர் 28]], [[1970]]) [[எகிப்து|எகிப்தின்]] இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப் பதவியை வகித்தார். எகிப்து நாட்டும் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த [[முகம்மது நகீப்]]புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[எகிப்தியப் புரட்சி]]க்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, [[சூடான்]] முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் [[நவீனமயமாக்கம்|நவீனமயமாக்கத்துக்கான]] பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த [[எகிப்து-சிரியா இணைப்பு]] உட்படப் [[பேரரேபியத் தேசியவாதம்]] பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.