தேயிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
== தேயிலை வரலாறு ==
{{cleanup}}
தேயிலையின் வரலாறு முத்லில் சீனாவில் இருந்தே தொடங்குகிறது.<br />
 
 
* 2737 B.C. -சீனாவின் இரண்டாம் மன்னரான 'சென் நுங்' என்பவர். தனது குடும்பத்தாருடன் ஒருநாள் மலை யேறும்போது தேயிலையைக் கண்டுபிடித்தார் முதலில் கசப்பாக இருந்ததினால் அதனை மூலிகை என்றே எண்ணினார். அதனை சுடுநீரில் கொதிக்க வைத்துக் குடித்தார். எனவே அவரே முதன் முதலில் தேயிலையைக் கண்டறிந்தவர் என வரலாறு கூறுகிறது.<br />
 
* 350 A.D.சீன அகராதிகளில் தேயிலையை 'எர்க் யா'(Erh Ya) எனாழைத்ததாக குறிப்புள்ளது.
 
* 400-600-தேயிலையை சீன மக்கள் மருத்துவத்திற்காகப் பயன் படுத்தினர். எனவே சீனாவில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. சீனர்கள் தேநீருடன் இஞ்சி,நறுமணப் பொருட்கள், ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகினர்.
 
* 400-சீனா அகராதியில் 'குவாங் யா' என அழைக்கப்பட்ட தேயிலை தாயரிப்பு பற்றி படிபடியாக விளக்கம் தரப்பட்டது
 
 
* 479-மங்கோலியர்கள் துருக்கியர்களுடன் தேயிலை வணிகத்தில் ஈடுபட்டனர்.
 
* 593-புத்த மதத்துடன் சேர்ந்து தேயிலையும் ஜப்பான் நாட்டிற்குப் பரவியது.சீனாவிற்கு புத்த மதக் கல்வி கற்கச் சென்ற ஜப்பானிய மத குருமார்கள் தங்களுடன் தேயிலை விதைகளையும் தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
 
* 618-907 'டி ஆங்' வம்சம் சீனாவில் இருந்தபோது அனைவராலும் விரும்பிப் பருகப்பட்ட பானமாக தேநீர் இருந்தது. மக்கள் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக தேநீரைப் பெருவாரியாகப் பருகினர்.
 
 
* 648-749-ஜப்பானியத் துறவியான 'கியோக்கி' 49 புத்தக் கோவில்களைச் சுற்றிலும் உள்ள தோட்டங்களில் தேயிலைச் செடிகளைப் பயிரிட்டார்.
* ஜப்பானில் தேயிலைப் பயிரிடுவதற்கு அதிக செலவானதால் அதனை மேல் தட்டு மக்கள் மட்டுமே பருகினார்கள்
 
* 725-729-சீனர்கள் தேயிலையை 'ச்சா' என அழைத்தனர். ஜப்பானிய மன்னர் புத்ததுறவிகளுக்கு தூளாக்கப்பட்ட தேயிலையை 'ஹைக்கி சா'(hiki-cha) வழங்கினார்.
 
 
* 780 களில் சீனாவில் முதன் முதலில் தேயிலைக்கான வரி வசூலிக்கப்பட்டது.
* சீனக் அறிஞர் "லூ யூ" தனது நாவலான "ச்சா சிங்" (The Classic of Tea) என்ற நூலில் தேநீர் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் சீனாவின் தேயிலை உற்பத்தி மற்றும் தயாரிப்பு முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார்.
 
* 805 புத்த மதத்துடன் தேயிலையும் ஜப்பானில் வேகமாகப் பரவியது. சீனாவில் கற்கச் சென்றா ஜப்பானியத் துறவிகளான "சைச்சோ" ,கொபொ டைஷி" ஆகியோர் தேயிலை பயிரிடும் முறை அது தொடர்பான உத்திகள் மற்றும் தேயிலை விதைகள் ஆகியவற்றுடன் ஜப்பான் திரும்பி ஜப்பானியக் கோவில் தோட்டங்களில் பயிரிட ஆரம்பித்தனர்.
 
 
* 960-1280 சங் வமிசம்(Sung Dynasty)-சீனாவில் தேயிலை பருகுவதற்காகவே பாண்டங்கள்(Tea cups) தயாரிக்கப்பட்டன.பல்வேறு சுவைகளிலும் நறுமணங்களோடும் தேநீர் தயரிக்கப்பட்டது.
* ஜப்பானில் "ஜென் புத்தமதம்" தேநீர் அருந்துவதைப் புனிதமாகக் கருதியது.
 
* 1101-1125 சீன மன்னர் ஹுயி சுங் காலத்தில் சீனாவில் பல்வேறு இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் பரவியது.
 
* 1191 - ஜப்பானில் ஜென் புத்த மதத்தை அறிமுகம் செய்த துறவியான "ஈசாய்" சீனாவில் இருந்து தேயிலை விதைகளை எடுத்துச் சென்று கியோட்டோ கோவிலைச் சுற்றிலும் அதைப் பரப்பினார்.
 
* 1206-1368 யுவான் வமிசம் (Yuan Dynasty)
 
==இந்தியத் தேயிலை==
"https://ta.wikipedia.org/wiki/தேயிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது