இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதிப்புரிமை மீறல் - https://www.google.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B...
வரிசை 3:
 
== வரலாறு ==
மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகளாக விரிந்திருந்த இணையிலி என்று அழைக்கப்பட்ட இணுவில் கிராமத்தில் முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் வடக்கில் பருத்தி, கரும்பு, கமுகு ஆகியனவும் தெற்கில் செந்நெல்லும் தழைத்தோங்கியது. ஒரு நாள் இரவு கனகராச முதலியாரின் அரண்மணைப் பகுதியில் ஒரு ஒளிப்பிழம்பு தெரிவதை அவதானித்த அக்கிராம மக்கள் முதலியாரின் நெற்போர் தீப்பிடித்து எரிகின்றது எனக்கருதி அவரது அரண்மணையினை நோக்கி ஓடி வந்தனர்.
 
ஆனால் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. இந்த அதிசயத்திற்கான காரணத்தை முதலியாரிடம் வினாவிய போது அவர் சற்று முன் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறு கூறி மறைந்து விட்டதாகவும் கூறினார். இது தனக்கும் தன் குடிமக்களுக்கும் அருள்பாலிக்கும் காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானின் அருள் என முதலியார் ஆனந்தமடைந்தார். திருவருள் சித்தத்திற்கு அமைய தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார் என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.
 
 
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின் அதே இடத்தில் 1661ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய இணுவில் கந்தசுவாமி ஆலயமாகும். பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்.
 
மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார். கனவில் தோன்றிய முருகன் காஞ்சியம்பதி எனக் குறிப்பிட்டது காஞ்புரம் குமரகோட்டக் கந்தன் என்பதையும் உணர்ந்து கொண்டார். அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் புராதன தல விருட்சமான நொச்சி மரம் கருவறைக்கருகில் தற்போதும் உள்ளது.
 
நாளடைவில் அவரது வெற்றிலைத் தோட்டம் அடியார்கள் வழிபடும் வணக்கத்தலமாக மாறியது. அயலவர்களும், ஊர்மக்களும் அங்கு வந்து வழிபடுவதோடு பொங்கல், பூசைகளை நடாத்தி முருகனை வழிபட்டனர். முருகப்பெருமானின் திருவருளை நாடிவந்த அடியார்களுக்கு அருணாசலம் அவர்கள் வாக்குச் சித்தி கூறும் ஒரு சித்தரும் ஆனார். அடியார் தொகை அதிகரித்ததால், வேற்பெருமான் இருந்த மாட்டுக்குடிலை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்விடத்தில் செங்கற்கோவில் வேலை குறுகிய காலத்தில் நிறைவுற்றதும் வேலவரை அங்கு பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடைபெற்றது.
 
== திருவிழா ==
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது