ஆவணி சதுர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஆவணி சதுர்த்தி''' என்பது [[ஆவணி]] [[மாதம்|மாதத்துச்]] சுக்கில பட்சத்தில் வரும் [[சதுர்த்தி]]யில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் [[விநாயகர்|விநாயக]] சதுர்த்தி [[விரதம்|விரதமாகும்]].
 
[[ஆவணி]] சதுர்த்தியில் விடியற் காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் [[பூசை]]க்குரிய சாதனங்களைச் சேகரித்துக் கொண்டு [[கும்பம்]] வைத்து அதன் முன்பு [[விநாயகர்|விநாயகரின்]] திருவுருவை எழுந்தருளச் செய்து பூசித்து அர்க்கியம் அளித்து [[அர்ச்சனை]] செய்து தூபதீபம் சமர்ப்பித்து வழிபடுதல் முறை. [[சந்திரன்|சந்திரனைப்]] பூசித்து [[விநாயகர்|விநாயக]] பூசையை முடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவில் சந்திரனைப் பார்க்கவே கூடாது. சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்த குற்றத்தால் [[விஷ்ணு]] அவமானம் அடைந்தாராம்.
 
[[விநாயகர்|விநாயகருக்கு]] [[அறுகு]]ம் வன்னிப்பாத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. [[புட்ப விதி]]யிலே [[சதுர்த்தி]] [[விரதம்|விரத]] காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பாத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, [[வில்வம்]], [[ஊமத்தை]], நொச்சி, நாயுருவி, [[கத்தரி]], [[அலரி]], காட்டாத்தி, எருக்கு, [[மருது]], விஷ்ணுகரந்தை, [[மாதுளை]], [[தேவதாரு]], [[மரு]], [[நெல்லி]], சிறுசண்பகம், [[செந்தாளி]], பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் [[அறுகு]]க்கு முதலிடம் தரப்படுகின்றது.
 
[[கதிரவன்]] [[சிங்கராசி]]யில் இருக்கும் போது, அதற்குரிய [[ஆவணி]] மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததை [[விநாயக சதுர்த்தி]] உணர்த்துவதாகச் சிலர் கருதுவர்.
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
 
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவணி_சதுர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது