பேதுரு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்பு சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 30:
*பேதுரு ({{lang-grc|Petros [πετρος]}}; {{lang-la|Petrus}}) "பாறை", "கல்" என்று பொருள்படும்.
 
பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் [[திருத்தந்தை]]யாகக் கருதப்படுகிறார். [[நீரோ]] மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். [[வத்திக்கான் நகர்|வத்திக்கானில்]] இவரது கல்லறை உள்ளதாகக் கருதப்படும் இடத்தில்[[வத்திக்கான்]] நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமுக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய [[புனித பேதுரு பேராலயம்பெருங்கோவில்]] அமைந்துள்ளது.
 
== புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு ==
வரிசை 52:
இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.}}
 
==பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு==
{{commonscat|Saint Peter|புனித பேதுரு}}
 
பேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் ''சீமோன்'' என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இரு இடங்களில் அப்பெயர் "சிமியோன்" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 15:14]]; [[2 பேதுரு (நூல்)|2 பேதுரு 1:1]]).
 
[[இயேசு]] பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் "பாறை" அல்லது "கல்" என்னும் பொருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய "கேபா" ({{lang-grc|Kephas}}) என்பதாகும். பேதுரு "கேபா" என்று ஒன்பது முறை [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு நூல்களில்]] அழைக்கப்படுகிறார். [[யோவான் நற்செய்தி]] ஒருமுறையும் [[பவுல் (திருத்தூதர்)|தூய பவுல்]] எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை "கேபா" என்று அழைக்கின்றன.
 
"கேபா" என்னும் அரமேயச் சொல் கிரேக்கத்தில் ''Petros'' என்று பெயர்க்கப்பட்டது. அதிலிருந்து தமிழ் "பேதுரு" என்னும் வடிவம் பிறந்தது. பேதுரு என்னும் பெயர் நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் 150 தடவைக்கு மேலாக வருகிறது. "சீமோன் பேதுரு" என்னும் இரட்டைப் பெயர் பெரும்பாலும் யோவான் நற்செய்தியில் சுமார் 20 தடவை வருகிறது.
 
கிரேக்க மொழி பேசிய [[கிறித்தவர்]] நடுவே "பேதுரு" என்னும் சொல் (பாறை, கல்) எளிதில் பொருள் விளங்கும் பெயராக விளங்கியிருக்கும்.
 
==பேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள்==
 
[[கத்தோலிக்க திருச்சபை]] [[இயேசு|இயேசுவின்]] [[திருத்தூதர்|திருத்தூதராகிய]] பேதுரு முதல் "திருத்தந்தை" (''Pope'') என்று அறிக்கையிடுகிறது. அதற்கு, கீழ்வரும் காரணங்கள் காட்டப்படுகின்றன:
*[[இயேசு]] தம் நெருங்கிய சீடர்களாகத் தெரிந்துகொண்ட "திருத்தூதர்கள்" (''Apostles'') பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருவுக்கு அளிக்கப்பட்டது;
*இயேசு பேதுருவுக்கு அளித்த சிறப்புப் பணி;
*பன்னிரு திருத்தூதர் குழுவில் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி.
 
பேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
*[[இயேசு]] தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).
*[[இயேசு]] திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: மாற்கு 8:29; மத்தேயு 18:21; லூக்கா 12:41; யோவான் 6:67-69).
*[[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] மற்றும் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] தரும் தகவல்படி, [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த இயேசுவை]] முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மத்தேயு, யோவான், மாற்கு நற்செய்திகளின்படி, [[மகதலா மரியா]] உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, "நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்" என்று இயேசு கூறுகிறார் (மாற்கு நற்செய்தி|மாற்கு 16:7]]).
*எல்லா நற்செய்தி நூல்களிலும் அதிக முறை பெயர்சொல்லிக் குறிப்பிடப்படும் [[திருத்தூதர்]] பேதுரு தான்.
*[[இயேசு]] பேதுருவிடம் தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.
*பன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத் தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: மாற்கு 3:16-19; மத்தேயு 10:1-4; லூக்கா 6:12-16).
{{commonscat|Saint Peter|புனித பேதுரு}}
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேதுரு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது