[[மன்னார்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]], [[முல்லைத்தீவு]] ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு '''வன்னி நாடு''' அல்லது '''வன்னிப் பெருநிலப்பரப்பு''' எனப்படுகின்றது. வன்னி நாடு [[இலங்கை]] வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும். இதன் அபரப்பளவு ஏறத்தாழ 7,650 கிமீ<sup>2</sup>. [[ஈழப்போர்|ஈழப்போரில்]] இப்பிரதேசத்தின் மக்கள் தொகை மற்றும் உட்கட்டுமானங்கள் வெகுவாகப் பாதிப்படைந்தன.
==பொருளாதாரத் தடை==
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பொருளாதரத் தடை நடைமுறையில் உள்ளது. இவை பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், இரும்பு, உரவகைகள் போன்றனவும் அடங்கும் எனினும் மதுபானங்கள், சிகரெட் போன்ற போதைவஸ்துக்களிற்குத் தடை ஏதும் கிடையாது. தவிர இங்கே வன்னிப்பரப்பில் இருந்து எந்தவொரு விளைபொருட்களும் இலங்கை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவரமுடியாது. இதனால் தேவைக்கு அதிகமாக நெல் விளைந்துள்ள வன்னியில் உள்ள விவசாயிகள் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமல் அல்லலுறும்போது இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது.