கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 135:
 
===திரெந்து பொதுச்சங்கம்===
16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற திரிதெந்து பொதுச்சங்கம் (1545-1563) பல அரசியல் சிக்கல்களுக்கும் லூத்தர், கால்வின், ஸ்விங்கிலி போன்ற சீர்திருத்தவாதிகளின் தாக்குதல்களுக்குமிடையே நிகழ்ந்தது. இச்சங்கத்தின் வெவ்வேறு அமர்வுகளில் எல்லா ஆயர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் சங்கமோ திருச்சபை அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது. சீர்திருத்தவாதிகள் விவாதத்துக்கு உட்படுத்திய கருத்துகளை, குறிப்பாக அருளடையாளங்கள், அருள், திருச்சபை ஆட்சி அமைப்பு, மீட்பு, நம்பிக்கை போன்றவற்றைச் சங்கம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஆயினும் சீர்திருத்தவாதிகளின் உண்மையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிய சங்கத்தில் அவ்வளவு முயற்சி செய்யப்படவில்லை. குறைகாணும் மனப்பான்மை மேலோங்கி காணப்பட்டது. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாதப்பொருட்களாக<ref name=v2/> இவற்றைக் குறிப்பிடலாம்:
<center>
{| class="wikitable"
|- Valign=top
! வரிசை
! பொதுச்சங்கம்
! ஆண்டு
! முக்கிய விவாதப்பொருள்
|-
| 19
| திரெந்து
| 1545-1563
| [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தச் சபை]]யினருக்கு எதிர்ப்பு, திருச்சபை சீர்திருத்தம்
|-
|}
</center>
 
===2-ம்முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்===
திரிதெந்துப் பொதுச் சங்கம் முடிவடைந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னரே முதலாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. 'திருச்சபை' என்ற பொருள்பற்றி விவாதிக்க கூடிய, இச்சங்கம் திருத்தந்தையின் முதன்மை மற்றும் வழுவாவரம் என்பவற்றை வரையறுத்ததோடு நின்றுவிட்டது. முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஒருசில மாதங்களே நிகழ்ந்தது. (8 டிச 1869-18 ஜூலை 1870). பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஒத்திப் போடப்பட்டது. அதிகாரப் பூர்வமாக அது முடிவுக்குக் கொணரப்படவில்லை. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாதப்பொருட்களாக<ref name=v2/> இவற்றைக் குறிப்பிடலாம்:
<center>
{| class="wikitable"
|- Valign=top
! வரிசை
! பொதுச்சங்கம்
! ஆண்டு
! முக்கிய விவாதப்பொருள்
|-
| 20
| வத்திக்கான் 1
| 1869-1870
| [[திருத்தந்தை|உரோமை ஆயரின்]] முதன்மை, வழுவா வரம்
|-
|}
</center>
 
===2ஆம் வத்திக்கான் பொதுச்சங்கம்===
{{main|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்}}
1962-1965 ஆண்டுகளில் வத்திக்கான் நகரிலுள்ள [[புனித பேதுரு பேராலயம்|பேதுரு பேராலயத்தில்]] நிகழ்ந்த பொதுச்சங்கப் பேரவைக் கூட்டத்தில் உலகனைத்திலுமிருந்து வந்த கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர். இம்மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பொதுச்சங்கம், எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை உண்மையை வரையறுக்கவோ தப்பறைகளைக் கண்டனம் செய்யவோ கூட்டப்படவில்லை. மாறாக, பிற கிறிஸ்தவச் சபைகளோடு உறவு ஏற்படுத்தல், உலக சமயங்களோடும் எல்லா மக்களோடும் இன்றைய உலகோடும் உரையாடலில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூட்டப்பட்டது. இப்பொதுச்சங்கத்தின் செயல்திட்டம் திருச்சபையின் உள்வாழ்வு பற்றியும் உலகோடு திருச்சபைக்குள்ள உறவு பற்றியும் அமைந்தது. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாதப்பொருளாக<ref name=v2/> இதைக் குறிப்பிடலாம்:
<center>
{| class="wikitable"
|- Valign=top
! வரிசை
! பொதுச்சங்கம்
! ஆண்டு
! முக்கிய விவாதப்பொருள்
|-
| 21
| வத்திக்கான் 2
| 1962-1965
| உலகோடு உரையாடும் திருச்சபை
|-
|}
</center>
 
''1. திருவழிபாடு, 2. சமூகத் தொடர்புக் கருவிகள், 3. திருச்சபை, 4. கத்தோலிக்கக் கீழைச் சபைகள், 5. கிறிஸ்தவ ஒன்றிப்பு, 6. திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி, 7. துறவற வாழ்வைப் புதுப்பித்தல், 8. திருப்பணிப் பயிற்சி, 9. கிறிஸ்தவக் கல்வி, 10. கிறிஸ்தவமல்லாச் சமயங்ளோடு திருச்சபைக்குள்ள உறவு, 11. இறை வெளிப்பாடு, 12. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி, 13. சமயச் சுதந்திரம், 14. திருச்சபையின் நற்செய்திப்பணி, 15. திருப்ணியாளர்களின் பணியும் வாழ்வும், 16. இன்றைய உலகில் திருச்சபை'' ஆகிய பதினாறு கருத்துகள் ஆராயப்பட்டு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானத் தொகுப்புகளாக செயலாக்கப்பட பதினாறு ஏடுகள் வெளியிடப்பட்டன. '''சங்க ஏடுகள்''' என்று அழைக்கப்படும் அவை, நவீன உலகத் திருச்சபைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்தவப்_பொதுச்சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது