இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{cleanup}}
'''இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு''' மகத்தானது. [[மகாத்மா காந்தி]] அவர்கள் "இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்படும்போது பெண்கள் செய்த தியாகம் முதலிடம் பெறும்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புத்தகங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பாக தமிழக பெண்கள் பங்கு ஒரு அடிக்குறிப்பு என்ற அளவில் கூட இடம் பெறவில்லை. எனவே இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்களிப்பினை வெளி கொணர்வதே
==பண்டைக் காலத் தமிழக மகளிர்==
வரிசை 17:
{{cquote|"என் மகன் முதுகில் புண்பட்டு இறந்துகிடப்பானானால் அவன் வாய் வைத்து உண்ட என் மார்பை அறுத்தெறிவேன்" என்று அத்தாய் வஞ்சினம் கூறி போர்க்களத்திற்கு சென்றாள். அங்கு மார்பில் புண்பட்டு தன் மகன் இறந்து கிடப்பதை கண்டவுடன் அவனை பெற்றெடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் மிகுதியான மகிழ்ச்சி அடைந்ததாக}} காக்கை பாடினியார் பாடுகிறார்.
பெண்ணெருத்தி ஒரு தாயிடம் சென்று உன் மகன் எங்குள்ளான் என்று கேட்கிறாள். அத்தாய்
சங்க காலத்தில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் காலப்போக்கில் தலைகீழாக மாறியது. கணவன் இறந்தவுடன் மனைவி உயிரோடு உடன்கட்டை ஏறவேண்டும். கைம்பெண் மறுமணம் ஒழுக்கக்கேடு என கருதப்பட்டது. குழந்தைமணம், பொருந்தாமணம், பன்மகளிர்மணம் ஆகிய சமுதாய சாபக்கேடுகள் இந்திய பண்பாட்டில் வலுவுடன் ஆதிக்கம் செலுத்தின. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் பெண்கள் கற்பை காக்கவேண்டுமென்ற பேரில் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மறுபக்கத்தில் கடவுளரின் பெயரில் பெண்களுக்கு பொட்டு கட்டுப்பட்டது. விலை மாதர்களாக பெண்கள் கற்பு விற்கப்பட்டது. இன்னும் பல கொடுமைகளுக்குள்ளாகி பெண் உலகம் தத்தளித்துக் கொண்டிருந்தது.
வரிசை 39:
காங்கிரஸ் பேரியக்கத்தால் நடத்தப்பட்ட இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் நேரடியாகப் பங்கு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும் இயக்க நடவடிக்கைகளை வெகு உன்னிப்பாகக் கவனித்து அப்பேரியக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி தங்களது கணவன்மார்களுக்கு உறுதுணையாக விளங்கி பல இன்னல்கள் அனுபவித்து பட்டிணியால் வாடியதாக சான்றுகள் பல உள்ளன.
[[வ.உ.சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கியும் உதவியுள்ளனர்.
சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்வச் சீமானின் மனைவியான மீனாட்சியம்மாள், தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும் தன் கணவரின் மேல் அன்பு கொண்ட பலர் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்தும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.
வரிசை 45:
சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கிகொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார். ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறுதான் ஒவ்வொரு தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அற்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர்.
தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது. வத்தலக்குண்டில் பிறந்தவரான சுப்பிரமணிய சிவா தமக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி மீனாட்சியம்மாளைத் துறந்து ஈன்று வளர்த்த அன்னையையும் மறந்து தேச விடுதலைப் போரில் அயராது ஈடுபட்ட அப்பழுக்கற்றவர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அந்நாளில் சிறைகளிலே தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இரவு நேரங்களில் படிக்கவும், எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலில் கடுமையான உழைப்பு. இச்சூழ்நிலையில் பட்டினியால் அவதிப்பட்டு கொண்டிருந்த தன் மனைவி மீனாட்சியின் துயர் துடைக்க "சச்சிதானந்த சிவம்"
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர் என்பவர் வுhந டிநயரவகைரட என்ற சேஷத்திரத்தின் வாயிலிற் செல்லுங்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும் இல்லாத ஒரு பிறவி நொண்டி அவரைக் கண்டு பிச்சை கேட்க அவர் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று அவன் கையைப் பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல வளர அவன் பரம சந்தோஷமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று கிருஸ்துவ வேத புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அதே மாதிரியாக எனது மனைவி என்னைச் சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில், தான் ஏழ்மைத் தனத்தினால் மிகக் கஷ்டப்படுவதால் தனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள நானும் "ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று கூறி எனது சற்குருமுகத்தினின்றும் கேட்டு, அறிந்து அனுபவித்தவைகளை ஒரு புத்தக ரூபமாய் எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன்’’ என்று 1911-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாள் சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார். அப் புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.
வரிசை 51:
==திருநெல்வேலி சதி வழக்கு==
தேச பக்தர்கள் சிறையில் அனுபவித்து வந்த கொடுமைக்கெல்லாம் காரணமான ஆஷை 1911-ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் மணியாச்சி இரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் என்ற 25 வயது நிரம்பாத வாலிபன் சுட்டு கொன்றுவிட்டு தானும் மாண்டான். இச்சம்பவம் தமிழ்நாட்டையும் பாரதத்தையும் அதிற்சிக்குள்ளாக்கியது. பத்திரிக்கைகள் ஆஷ் கொலையை கண்டித்தும் திருமதி ஆஷ்க்கு ஆறுதல் கூறியும் தலையங்கங்கள் வெளியிட்டன. ஆனால் பாரிஸ் நகரிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிக்கை “இந்திய மக்கள் உறங்கி கொண்டிருக்கவில்லை என்பது ஆஷ் கொலையால் உறுதிபடுகிறது” என்று எழுதியது. அப்பத்திரிக்கை ஆசிரியையான மேடம் காமா மராட்டி மாநிலத்தைச் சேர்ந்த பார்சி பெண்மணி
ஆஷ் கொலையுண்ட பின்னர் செங்கோட்டையிலுள்ள [[வாஞ்சிநாதன்|வாஞ்சிநாதனின்]] வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நாற்பதுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள். அவ்விருவரும் விசாரணைக்குப்பிறகு விடுதலைச் செய்யப்பட்டனர். ஒரு தேசபக்தரை திருமணம் செய்ததால் பருவமடைந்த நாளிலிருந்து கைம்பெண் வாழ்க்கை வாழ்ந்து வந்த வாஞ்சியின் மனைவி பொன்னம்மாளுக்கு திரு.[[அண்ணாதுரை]] அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஓய்வுகால ஊதியம் வழங்கி கௌரவித்தார்.
வரிசை 57:
== சுயஆட்சி இயக்கம்==
சமூக கட்டுப்பாட்டிற்குள்ளாகி அடைப்பட்டுக் கிடந்த தமிழக மகளிரை அரசியலில் ஈர்த்தது அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து அம்மையாரால் காங்கிரஸின் ஆதரவோடு 1916-இல் சென்னையில் தொடங்கப்பட்ட சுயஆட்சி இயக்கமாகும். ஆங்கில அரசை எதிர்த்து இந்தியா சுய ஆட்சி பெறவேண்டுமென்று போர்க்கொடி தூக்கியமையால் இவர் சிறை வைக்கப்பட்டார். இவ்வம்மையாரின் கைது ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட இப்போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்து படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார்.<sup>15</sup> அம்மையார் கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் செம்டம்பர் 14-ஆம் நாள் பொதுக் கூட்டம் கூட்டினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அம்மையார் விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.<sup>16</sup> இதுவே நீண்ட நாள் அமைதிக்குப்பிறகு தமிழகப் பெண்டிர் அரசியலில் அடிவைத்த சம்பவமாகும். இவரின் சேவையை பாராட்டி 1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற 32-வது காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது உரையின் முடிவில் பின்வருமாறு கூறினார்.
: "சகோதர சகோதரிகளே உங்கள் வாய்கள்
:: இந்திய விடுதலை பற்றியே பேசட்டும்
வரிசை 73:
காந்தியின் போராட்டம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு உடல் சக்தி தேவையில்லை. மன உறுதியே போதும். காந்தி பெண்களுக்கு ஏராளமான மன உறுதி இருப்பதாகக் கருதினார். அதன் முதல்படியாக அவர் தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியை தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.
தன்னோடு அங்கு சத்யாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மை என்ற 17 வயது நிரம்பாத தமிழ் பெண்ணின் வீரஉணர்வை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தார்; சிறைக்கொடுமையின் தீவிரப்பிடியில் இருந்த நிலையிலும் "உயிர்போகும் வரையிலும் விடுதலைக்காகப் போராடத் தயார்"
என்று பெருமிதத்தோடு கூறிய அவ்வீரச்சிறுமியின் உயிர் 22-2-1914 அன்று
1920-ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர்.
இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.<sup>18</sup> மேலும் உயர்ந்த பட்டுடுத்தி வந்த இவர்கள் கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.<sup>19</sup>
இவ்வியக்கத்தின் இன்னொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணவேண்டுமென்பதோடு, நம்மக்கள் பொருளாதார தன்னிச்சை பெறவேண்டும் என்பதாகும். இதை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் [[மதுரை]]யைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். அம்மையார் தன் கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றவும் செய்து வரலானார். தனது கணவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் வரை ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்தும், அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். இவர் சிறந்த பேச்சாளர். தன் சொற்பொழிவுகளில் சில சமயங்களில் 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்வார். அதைக் கேட்பவர்கள் ஆங்கில அரசை அறவே ஒழித்துவிடவேண்டுமென்று ஆவேசப்படுவர். சிலர் சபதம் எடுப்பர். அத்தனை சிறப்பு வாய்ந்தது அவர் பேச்சு. இவ்வாறு ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் அங்கத்தினர்களாகவும் ஆக்கினார்.
ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னரும் இவ்வம்மையார், கதர் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டார். நிர்மாணத் திட்டத்தின் (ஊழளெவசரஉவiஎந Pசழபசயஅஅந) அவசியத்தைக் கருதி கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் [[மதுரை]]யில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினர். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் சுமார் முப்பது பெண்மணிகள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக்
==நீல் சிலை சத்தியாக்கிரகம்==
{{main|நீல் சிலை சத்தியாக்கிரகம்}}
இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த சம்பவம், திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட "1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு" என்ற வீரசாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட புத்தகமாகும். புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி
எத்தனையோ தடையுத்தரவுகளைத் தாண்டி இப்போராட்டம் நடைபெறுகையில், சென்னையில் தேசிய காங்கிரஸ் கூடுவதை முன்னிட்டும், சைமன் குழவின் சென்னை வருகையை முன்னிட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போராட்டம் தமிழர்கள் 1857-ஆம் ஆண்டில் நடந்த புரட்சியில் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்வதோடு, தங்கள் தேச பக்தியையும், அந்நிய ஆதிக்கத்தின் மீதுள்ள வெறுப்பையும், மகளிர் வீர உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
வரிசை 97:
பெண்கள் அதிக அளவு ஈடுபட்ட போராட்டம் இதுவேயாகும். 1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாடு சட்ட மறுப்பு போராட்டம் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்து காந்தியடிகளிடம் சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது. காந்தியடிகள் வகுத்த திட்டங்களை அப்போதைய வைசிராய் இர்வின் பிரவு நிராகரித்தவுடன் தான் அறிவித்தபடி அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுமார் 150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டீ என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார். அச்சம்பவத்தில் ஏராளமான சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. உடனே தேசமெங்கும் சுதந்திர ஆர்வம் பொங்கி எழுந்தது.
தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று ராஜகோபாலாச்சாரி அவர்கள் விரும்பினார். தஞ்சாவூரிலுள்ள வேதாரண்யம் கடற்கரையில் உப்பெடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1930 ஏப்ரல் 13-ஆம் தேதி வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சத் தொடங்கியபோது கைது செய்யப்பட்டார். அடுத்து கே. சந்தானம் அவர்கள் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ருக்மணி லட்சுமிபதி அம்மையாரும் உடன் ஒத்துழைத்தார். தொண்டர்கள் பல இடங்கள் போய் உப்பு சேகரித்து சிறைப்பட்டனர். அங்கிருந்த சத்தியாககிரகிகள் கூட்டம் போடுவர், அதிகாரிகள் அவர்களை தடியினால் தாக்கிக் கலைப்பர். எந்த உதவியும் பொது மக்கள் செய்யக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டது. ஆனால் மக்கள் அதற்கு மசியவில்லை. மற்ற சத்தியாக்கிரகிகள் கைதானபோது சத்தியாகிரகிகளின் ஒரே பெண் தொண்டரான ருக்மணிலட்சுமிபதி அவர்கள் தலைமை வகித்தார்.<sup>26</sup> இவ்வம்மையார் 1929-ஆம் ஆண்டில் "சென்னை இளைஞர் சங்கம்"’ என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் தேச பக்தியை ஏற்படுத்த உழைத்தார்.<sup>27</sup> சட்டமறுப்புப் போராட்டம் தொடங்க வேண்டுமென்று காங்கிரஸ் தீர்மானித்தவுடன் இவர் இச்சங்கத்தைக் கூட்டி அத்தீர்மானங்களை ஆமோதித்தார்.<sup>28
வேதாரண்யத்தில் சத்திக்யாகிரகம் நடந்து கொண்டிருந்தபோது சென்னை நகரிலும் தி. பிரகாசம் அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. அதை முளையிலேயே கிள்ளுவதற்காக அவரை அரசு உடனே கைது செய்தது.<sup>34
பின்னர் மே மாதம் இரண்டாம் நாள் இவ்வம்மையார், கிருஷ்ணம்மா மேலும் சில பெண்கள் உப்புச் சட்டத்தையும், தடையுத்தரவையும் மீறி; சென்னை சாந்தோம் கடற்கரையில் உப்புக் காய்ச்சத் தொடங்கியபோது போலீஸார் அவ்வுப்புப்பானைகளை உடைத்ததோடு கூட்டத்தையும்
பின்னர் காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க, கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல் செய்யும் போராட்டத்திலும், கதர் உற்பத்தியிலும் பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள் கடமை என்னவென்றால் வியாபாரிகளை அணுகி அவ்வியாபாரத்தை விட்டுவிடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்குமாறும் அறிவுரைக்க வேண்டும். இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடை செய்யவேண்டும். இதுவே காந்தியடிகளின் அறிவுரை. இவ்வறிவுரைக்கு இணங்க தமிழகப் பெண்கள் காங்கிரஸ் கமிட்டிகளில் சேர்ந்து இப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இவர்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும், சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாது மேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் முதன்மை வாய்ந்தவர் சென்னை எஸ். அம்புஜம்மாள் ஆவார். இவர் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் விருப்பத்திற்கு மாறாக காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இவரும் ஞானம்மாள மற்றும் இதர பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் மறியல் செய்தனர். இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. எனினும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது அரசு அம்மையாரை மட்டும் கைது செய்யவில்லை. ஆனால் அவரோடு உழைத்த ஏழு பெண்களும் கைதானர்கள். அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பி.லீலாவதி, லலிதா பிரபு ஆகியோரை தலைச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் காவலர்களால் அவர்களது தாலி அறுக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் அவ்விடம் "தாலியறுத்தான் தலைச்சேரி" என்று வழங்கலாயிற்று.<sup>41</sup>
மற்றொரு அம்சமான கல்லூரி மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் 1930-ஆம் ஆண்டு செப்படம்பர் 3-ஆம் நாள் தொடங்கினார். அம்மையாரும் அவரோடு சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களும், கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிப்பதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில்
தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் யாவும் நடைபெறும். வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். ராட்டையும்; கையுமாகவே அனைவரும் தென்பட்டனர். தினசரி நடைபெறும் கூட்டங்களில் சத்தியாக்கிரக நிதிக்காக பணமும், காசும், நகையும், சாமான்களும் பலர் கொடுத்தனர். பலர் சிறை சென்றனர். பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனை பெற்றார். அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை துறந்தனர், சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள்.<sup>45</sup> காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை துறந்தார்.
கைதானவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுதலையடைந்தனர். இவ்வொப்பந்தத்தின்படி நாடு முழுவதும் சாத்வீக மறியல் தொடங்கப்பட்டது. [[மதுரை]]யில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் மறியல் செய்தனர். இது தொடர்பாக [[மதுரை]] பத்மாசனி அம்மாள், சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்கள் குறிப்பிடத்
1932-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக அரசு நடந்து கொண்டமையால் காந்தியடிகள் காரிய கமிட்டியுடன் ஆலோசித்து போராட்டத்திற்கான பல திட்டங்களை வகுத்தார். இதை அறிந்த வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் வைத்தார். இச்செய்தி எட்டியதும் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். நாடு முழுவதும் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியது. முக்கிய அங்கத்தினர்களும், தலைவர்களும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் குழுக்களை சட்ட விரோதமான ஸ்தாபனம் என்று அறிவித்து அவைகள் கலைக்கப்பட்டன.
தமிழகத்தில், காந்தியடிகள் கைது மக்களை திரண்டு எழச் செய்தது, காங்கிரஸ் நியமித்துள்ள பிரதிநிதிகளான பத்மாசனி அம்மாள், தாயம்மாள் மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகிய முப்பது பெண்கள் [[மதுரை]]யில் மட்டும் கைதாகி சிறை சென்றனர்.<sup>48</sup>
==தேசபக்தி பாடல்கள்==
வரிசை 132:
பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை பாரத மாதா”
என்ற பாடலை [[கே.பி.சுந்தராம்பாள்]] பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது.
இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத்
[[எஸ்.ஆர்.ரமாமணிபாய்]] பாடிய
வரிசை 139:
என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. [[மதுரை]] எம்.கண்ணம்மாள் பாடிய "சத்யமெங்குமே தளரா நாடு-இந்து தேசமதைப்புகழ்ந்துபாடு….”
என்ற பாடலும் பிரபலமானவை.<sup>50</sup>
தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு. வீரவிளக்கு [[வா.வெ.சு.ஜயர்]] காந்தி புராணத்திற்கு தமது பாலபாரதி இதழில் பின்வருமாறு மதிப்புரை எழுதினார்.
"பண்டிதை ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மையார் அருளிய காந்தி புராணத்திற்கு நல்வரவு கூறுகிறோம். ஆத்ம சக்தியின் வெற்றிமுரசு மிருக பலத்தை திடுக்கிடச்செய்யும். இந்த நவயுகத்திற்கு நாயகனான மஹாத்மா காந்தியடிகளின் சரிதையைப் புராணம் வாயிலாக சாசுவதப்படுத்திய அம்மையாருக்குத் தமிழ்நாடு மிகவும் நன்றி செலுத்தக்
பின்வரும் வட்டவணையிலிருந்து பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றதை அறியலாம்.
வரிசை 468:
ஆதாரம்: அரசு ஆணை எண்.386அஇ பொது துறை இ 7-03-1932
சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைக்குள்ளானார்கள். வேலூர் மத்தியச் சிறையிலுள்ள பெண் அரசியல் கைதிகளிடம் குங்குமமும் அவர்கள் கையிலணிந்திருந்த வளையல்களும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டன.<sup>52</sup> அவர்களுக்கு அளிக்கப்பட்ட படுக்கைகள் மிகவும் அசுத்தமாக இருந்தன. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு குளிக்கக் கொடுக்கும் எண்ணெய் ஒருநாளைக்குக் கூட போதுமானதாக இராது. சாப்பிடக் கொடுக்கும் சாதத்திலும், மாவிலும் பூச்சிகள் நிரம்பி இருக்கும். நூறு பெண்கள் வரை ஒரு கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நான்கு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை அடைத்து வைக்கப்படுவார்கள். இவர்கள் கல் உடைத்தல், கம்பளி நெய்தல் போன்ற வேலைகள் செய்யவேண்டும். சென்னை குற்றவாளிகள் திருந்துவதற்கான சிறையில் அரசியல் கைதிகளும் மற்ற குற்றவாளிகளும் சேர்ந்து ஒரே பிரிவில் பன்னிரெண்டு பேர் தூங்க வேண்டும். பெண்களும்
தனிநபர் சத்தியாகிரகம்
வரிசை 474:
அடக்குமுறை தீவிரமாகவே நாட்டில் இயக்கம் ஒருவாறு மந்தமடைந்தது. இதைப் பார்த்து தனிப்பட்ட சட்ட மறுப்புக்கு காந்தியடிகள் அனுமதி வழங்கினார். ஒவ்வொருவரும் கைதாகும் வரை சளைக்காது சேவைசெய்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் தனிப்பட்ட சட்டமறுப்பின் பெருமையை எடுத்துக் கூறினார். பின்னால் காந்தியடிகளும் சட்ட மறுப்பு செய்து தண்டிக்கப்பட்டார்.
இச் சத்தியாக்கிரகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் பல பெண்கள் பங்கு கொண்டு சிறை சென்றனர். 1940 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் ருக்மணி லட்சுமிபதி சத்தியாக்கிரகம் நடத்தியமையால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். சிறை செல்லும்போது, "இந்தியப் பெண்கள் மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்று நம் தாயகத்தின் பெருமைக்கும், உயர்வுக்கும்
என்று கேட்டுகொண்டார்.
[[மதுரை]]யில் கே.பி.சானகிஅம்மாள் இரண்டாம் உலகப் போருக்கெதிராகப் பிரச்சாரம் செய்தபோது கைதானார். மேலும்; [[மதுரை]]யைச் சேர்ந்த சொர்ணம்மாள் மற்றும் செல்லம்மாள் பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். அவர்களைப் பின்பற்றி [[மதுரை]]யில் அகிலாண்டத்தம்மாள், லட்சுமிபாரதி, திருமதி. சௌந்தரம் ராமசந்திரன், திருமதி. கிருஷ்ணசாமி, திருமதி. ராமசாமி ஆகியோர் சிறை சென்றனர்.<sup>57</sup>
குமாரமங்கலத்து சமீந்தாரினி இராதாபாய் சுப்பராயன் உலகப்போருக்கெதிராக எட்டு பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்ட பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள் மற்றும் கரூரைச் சேர்ந்த பியாரி பீபி, ஆகியோர் இச்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
சுதந்திரப் போராட்டத்தின் கடைசி அத்தியாயம் 1942
வெள்ளையரை எதிர்த்து [[மதுரை]]யில் கண்டன ஊர்வலங்கள ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் வரை தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி தீச்சட்டி கோவிந்தன் மற்றும் பிற போலீசார் சொர்னம்மாள் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த [[மதுரை]]யில் வாழ்ந்து வந்த லட்சுமி பாய் ஆகிய இருவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் கோவில் சாலையில் ஒரு காட்டில் இறக்கி அவ்விரு பெண்களின் ஆடைகளையும் பிடுங்கிக்கொண்டு அடித்து உதைத்தனர். இதுதான் சுதந்திரப்பாதை என்று கூறி ஒரு காட்டுப்பாதையில் அவர்களைத் தூக்கி வீசினர். இரவு முழக்க அங்கே மறைவிடத்தில் மறைந்திருந்துவிட்டு காலையில் அங்கிருந்த விவசாயிகள் உதவியால் ஆடைகள் பெற்று கட்டிக் கொண்டு [[மதுரை]] வந்து சேர்ந்தனர்.<sup>58</sup> அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இராணி மேரி கல்லூரி மற்றும கிறித்தவக் கல்லூரி மாணவியர் கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பேரணிகளும், மறியல் போராட்டங்களும் நடத்தினர்.
புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசியப்பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் இவ்வியக்கத்தின்போது தடை செய்யப்பட்டது. இவர் பின்வரும் பாடலான
"அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க
அகிம்சைப்போர்தொடுத்தார் காந்திமகான்"
என்றப் பாடலை உணர்ச்சியோடு பாடி ஹார்மோனியம் வாசித்தார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தன் ஒருவயது கை குழந்தையுடன ஆறுமாதம் சிறையிலிருந்தார்.<sup>59
டி.கே.பட்டம்மாள் சிறுவயதிலேயே பாரதியின் பாடல்களைப் பாடி தேசப்பற்றினை வளர்த்தவர். காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்திருந்தபோது அவர் முன்னிலையில்
வரிசை 498:
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம்வாங்கினால்
கை கொட்டி சிரியாரோ…..”
எனும் பாடலைப்பாடி பாராட்டினைப் பெற்றவர்.<sup>60</sup>
பாடகியும், நடிகையுமான எம்.ஆர்.கமலவேணி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலும் பாடுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்.
வரிசை 504:
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவம்
தமிழக மகளிர் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சென்று இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்ற வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற வீராங்கனை. இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். இந்திய சுதந்திரத்திற்காக தன் ராணுவத்திற்கு நிதி கொடுங்கள் என்று நேதாஜி கூறியதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு இவர் தான் போட்டிருந்த ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். மீண்டும் நேதாஜி பாரத நாட்டுக்காக ராணுவப் படையில் அணிதிரளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தவுடன் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு நன்கொடையாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மகளிருக்கென்று அமைந்த 'ஜான்ஸிராணி ரெஜிமெண்ட்'டில் சிப்பாயாகச் சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு ‘லாண்ட்ஸ் நாயக்’ என்று பதவி உயர்வு அளித்தார். 1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில்
லட்சுமிசுவாமிநாதன், ஆசாத் இந்து அமைச்சரவையில் சமூகப்பணி மற்றும் மருத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். மருத்துவப் பணியைத் துறந்துவிட்டு ஜான்சிராணி ரெஜிமென்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இவரை அழைத்தபோது எவ்விதத் தயக்கமும் காட்டாது மருத்துவப்பணியை துறந்துவிட்டு, அப்பொறுப்பை ஏற்று செயல்படத் தொடங்கினார். தமது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஆசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைச் சேர்த்து கொண்டார்.
|