இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==பண்டைக் காலத் தமிழக மகளிர்==
 
தமிழக மகளிர் பண்டையக் காலத்தில் வீர வாழ்க்கை வாழந்தமைக்கு பல குறிப்புகள் உள்ளன. நாட்டுப்புற கதைகள் தமிழகத்தில் பழங்காலத்தில் பெண்ணாட்சி இருந்ததாக தெரிவிக்கின்றன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரிய மன்னரின் அவைக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ், பாண்டிய நாட்டில் அரசி ஒருவர் ஆட்சி செலுத்தியதை பற்றி தமது இண்டிகாவில் பின்வருமாறு எழுதியுள்ளார். முன்பு பாண்டிய நாட்டில் பாண்டேய என்பவள் ஆண்டு வந்தாள். அப்பகுதி 365 கிராமங்களைக் கொண்டது. அந்த நாடு தென் கடல் வரை பரந்திருந்தது. அவளிடம் 500 யானைகள, 4000 குதிரைகள், 18000 ஆட்கள் கொண்ட படை இருந்தது. <sup>1</sup>
 
மேலும் ஆரவல்லி சூரவல்லி பவளக்கொடி முதலிய கதைகள் பழங்காலத்தில் பெண் ஆட்சி நடைப்பெற்றதை நமக்கு விளக்குவனவாய் அமைந்துள்ளன. வேதகாலத்தில் திராவிடப் பெண்கள் படையில் சேர்ந்திருந்ததாக வரலாற்று பேராசிரியர்கள் சான்று காட்டுக்கின்றனர்; சங்க காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வம் போருக்குரிய தெய்வமாக போற்றப்பட்டது. மகளிர் வீரம் நிறைந்தவர்களாக காணப்படினும் போர்க்களத்திற்கு சென்று பகைவரோடு போர் இடுவதற்கு வாள் ஏந்தி செல்லும் வாயப்பினை தந்தை ஆட்சி சமுதாயம் அவர்களுக்கு கொடுத்ததாக இலக்கிய சான்றுகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பகைவரிடம் இருந்து தாய் நாட்டை காக்க தம் புதல்வர்கள், கணவர் ஆகியோரை தியாகம் செய்வதை பெருமையாகக் கருதினார்கள். வீரத்திற்கு அவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று பின் வரும் புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகிறது.
<blockquote>
இவளுடைய துணிவு நினைத்தாலே அச்சத்தை கொடுக்கிறது. மறக்குடிமகள் என்பது முற்றிலும் பொருத்தமே. முன்னர் நடந்த போரிலே தந்தை போர்க்களத்தில் யானைகளை கொன்று வீர மரணம் எய்தினான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் திரளான ஆநிரைகளை காத்து அப்போரில் மாண்டான். இப்போதும் போர்பறை கேட்டு மகிழ்ந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் குடுமிக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை அணிவித்து வெற்றியை தரும் வேலினை கையில் கொடுத்து போர் முனை நோக்கி செல்க என போக விடுகின்றாளே என்னே இவளுடைய வீரம்.<sup>2</sup>
</blockquote>
என்று வியந்து பாராட்டுகிறது.
வரிசை 15:
'''''புறநானூற்றில் வேறோரிடத்தில் இடம் பெற்ற சம்பவம்'''''
ஒரு வீரனுடைய தாய் தன் மகன் இறந்த திறத்தைக்காண போர்க்களம் சென்றாள். அங்கு எதிர்த்த பகைவர்களைக் கொன்று முடிவில் உடல் வெட்டுண்டு சிதறிக் கிடந்த தன் மகனுடைய வீரச்சிறப்பை கண்டு அப்பெருமிதத்தால் அவளுடைய வற்றிய மார்புகள் மீண்டும் பாலூறிச் சுரந்ததாக ஒளவையார் கூறுகிறார். வயது முதிர்ந்த ஒரு தாயுடைய மகன் போர்க்களத்திற்கு சென்றிருந்தான். அவன் பகைவர் படைக்கண்டு அஞ்சி முதுகில் புண்பட்டு இறந்தான் என்று சிலர் அத்தாயிடம் கூறினர். இதைக் கேட்டவுடன்
{{cquote|"என் மகன் முதுகில் புண்பட்டு இறந்துகிடப்பானானால் அவன் வாய் வைத்து உண்ட என் மார்பை அறுத்தெறிவேன்" என்று அத்தாய் வஞ்சினம் கூறி போர்க்களத்திற்கு சென்றாள். அங்கு மார்பில் புண்பட்டு தன் மகன் இறந்து கிடப்பதை கண்டவுடன் அவனை பெற்றெடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் மிகுதியான மகிழ்ச்சி அடைந்ததாக}} காக்கை பாடினியார் பாடுகிறார்.<sup>3</sup>
 
பெண்ணெருத்தி ஒரு தாயிடம் சென்று உன் மகன் எங்குள்ளான் என்று கேட்கிறாள். அத்தாய் "புலி தங்கி விட்டு சென்ற குகைபோல பெற்றெடுத்த வயறு இங்கே உள்ளது. ஆனால் அவன் போர்க்களத்தில் தான் காணப்படுவான். ஆதலால் அங்கு சென்று காண்பாயாக." என்று கூறுகின்றாள். மேலும் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பிய தாய் தன் மகன் மார்பில் வேல் பட்டு ஊடுருவி சென்ற புண்ணை புறப் புண்ணென கருதி நாணிச் சூளுரைத்தது பற்றிய செய்தியும் புறப்பாடலில் காணப்படுகின்றது. எனினும் போர்க் காலத்தில் பசு, அந்தணர், நோயாளிகள், முதியோர் ஆகிய வலுவற்றவர்களுடன் பெண்களும் பாதுகாப்பான அரண்களுக்குள் சேர்க்கப்பட்டனர்.
வரிசை 23:
இவ்வாறாக பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தபோதிலும் பெண்கள் ஆட்சி பொறுப்பு வகித்துள்ளமைக்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் [[மதுரை]]யை ஆண்ட [[இராணி மங்கம்மாள்]], [[இராணி மீனாட்சி]], சிவகங்கை இராணி [[வேலு நாச்சியார்]] மற்றும் [[வெள்ளச்சி நாச்சியார்]] ஆவார்கள.
 
இராணி மங்கம்மாள் நாயக்கர் மரபில் வந்த பேரரசி. அவள் அமைத்த சாலைகளாலும், வெட்டிய குளங்களாலும், செப்பனிட்ட கால்வாய்களாலும், கட்டிய சத்திரங்களாலும் மங்கம்மாள் பெயர் இன்றும் மங்காமல் இருக்கிறது. சாதுரியமாக முகலாய பேரரசிடம் நடந்து தஞசை நாட்டை அவர்களுடைய படை உதவியால் மீட்டுக்கொண்டாள். மதவெறி பிடித்த ஒளரங்கசீப் வாழ்ந்தகாலத்தில் ஆட்சி செய்தபோதிலும் இராணிமங்கம்மாள் எம்மதமும் சம்மதம் என்ற சர்வ சமய சமரச கொள்கையைப் பின்பற்றி வரலாற்றில் மங்காத இடத்தை பிடித்தாள்.<sup>4</sup>
 
அந்நிய ஆட்சியின் கொடுமைகளால் அவதியுற்று அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாட்டின் அடிமைத்தனத்தினை அகற்ற போராடிய வீரர்கள் பலர். தமிழ்நாடும் பல வீரர்களை அளித்த பெருமைக்குரியது. இங்கு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டப்பொம்மன் என்ற பாளையக்காரன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்தமையால் தூக்கு தண்டனை பெற்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் தீபகற்ப கூட்டமைப்பை உருவாக்கி புரட்சி செய்த பெருமை தமிழ்நாட்டையேச் சேரும். சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
பின்னர் 1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர். சுமார் 8 மணிநேரம் நடைபெற்ற இப்புரட்சியில் வேலூர் நகர ஆண்களும் பெண்களும் பங்கு கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.<sup>5</sup> ஆனால் தேசியம் தழுவிய போராட்டம் 1885 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசால்தான் ஏற்பட்டது.
 
இக்காலக் கட்டத்தில் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களுக்தெதிரான கொடுமைகளை கடுமையாகச் சாடினர். அதன் விளைவு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பெண்கள் நிலையில் மாற்றம் காணத் தொடங்கியது. சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண் கல்வி புகட்டப்பட்டது. நான்கு சுவருக்குள் அடைப்பட்டிருந்த பெண்கள் வெளியுலகைப் பார்த்தனர்.
வரிசை 39:
காங்கிரஸ் பேரியக்கத்தால் நடத்தப்பட்ட இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் நேரடியாகப் பங்கு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும் இயக்க நடவடிக்கைகளை வெகு உன்னிப்பாகக் கவனித்து அப்பேரியக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி தங்களது கணவன்மார்களுக்கு உறுதுணையாக விளங்கி பல இன்னல்கள் அனுபவித்து பட்டிணியால் வாடியதாக சான்றுகள் பல உள்ளன.
 
[[வ.உ.சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கியும் உதவியுள்ளனர்.<sup>6</sup> சுதேசி கப்பல் நிறுவனம் "காலியா" "லாவோ" என்னும் பெயருடைய இரு கப்பல்களை வாங்கியது. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே "வந்தேமாதரம்" எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன 'காலியா' 'லாவோ' கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி 'வீர சிதம்பரம் வாழ்க' எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி பெண்களும் இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.<sup>7</sup> திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சிதம்பனாரையும், சுப்புரமணியசிவாவையும், போலீஸ் படையினர் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். தம்மைக் கண்டு விம்மியழுத மனைவியைப் பார்த்து "மீனாட்சி பயப்படாதே! விரைவில் வந்து விடுகிறேன்"’ என்று 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிதம்பரனார் ஆறுதல் கூறினார்.<sup>8</sup>
 
சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்வச் சீமானின் மனைவியான மீனாட்சியம்மாள், தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும் தன் கணவரின் மேல் அன்பு கொண்ட பலர் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்தும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.<sup>9</sup>
 
சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கிகொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார்.<sup>10</sup> ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறுதான் ஒவ்வொரு தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அற்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர்.
 
தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது. வத்தலக்குண்டில் பிறந்தவரான சுப்பிரமணிய சிவா தமக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி மீனாட்சியம்மாளைத் துறந்து ஈன்று வளர்த்த அன்னையையும் மறந்து தேச விடுதலைப் போரில் அயராது ஈடுபட்ட அப்பழுக்கற்றவர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அந்நாளில் சிறைகளிலே தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இரவு நேரங்களில் படிக்கவும், எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலில் கடுமையான உழைப்பு. இச்சூழ்நிலையில் பட்டினியால் அவதிப்பட்டு கொண்டிருந்த தன் மனைவி மீனாட்சியின் துயர் துடைக்க "சச்சிதானந்த சிவம்" என்ற அரிய வேதாந்த நூலை, தமது சிறை வாசத்தின்போது இயற்றினார். அந்நூலை அவர் இயற்ற காரணமாக இருந்த மிகவும் பரிதாபகரமான அந்த நிகழ்ச்சியை அவரே அந்த நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.
 
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர் என்பவர் வுhந டிநயரவகைரட என்ற சேஷத்திரத்தின் வாயிலிற் செல்லுங்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும் இல்லாத ஒரு பிறவி நொண்டி அவரைக் கண்டு பிச்சை கேட்க அவர் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று அவன் கையைப் பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல வளர அவன் பரம சந்தோஷமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று கிருஸ்துவ வேத புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அதே மாதிரியாக எனது மனைவி என்னைச் சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில், தான் ஏழ்மைத் தனத்தினால் மிகக் கஷ்டப்படுவதால் தனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள நானும் "ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று கூறி எனது சற்குருமுகத்தினின்றும் கேட்டு, அறிந்து அனுபவித்தவைகளை ஒரு புத்தக ரூபமாய் எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன்’’ என்று 1911-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாள் சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார். அப் புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.<sup>11</sup>
 
==திருநெல்வேலி சதி வழக்கு==
 
தேச பக்தர்கள் சிறையில் அனுபவித்து வந்த கொடுமைக்கெல்லாம் காரணமான ஆஷை 1911-ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் மணியாச்சி இரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் என்ற 25 வயது நிரம்பாத வாலிபன் சுட்டு கொன்றுவிட்டு தானும் மாண்டான். இச்சம்பவம் தமிழ்நாட்டையும் பாரதத்தையும் அதிற்சிக்குள்ளாக்கியது. பத்திரிக்கைகள் ஆஷ் கொலையை கண்டித்தும் திருமதி ஆஷ்க்கு ஆறுதல் கூறியும் தலையங்கங்கள் வெளியிட்டன. ஆனால் பாரிஸ் நகரிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிக்கை “இந்திய மக்கள் உறங்கி கொண்டிருக்கவில்லை என்பது ஆஷ் கொலையால் உறுதிபடுகிறது” என்று எழுதியது. அப்பத்திரிக்கை ஆசிரியையான மேடம் காமா மராட்டி மாநிலத்தைச் சேர்ந்த பார்சி பெண்மணி வெளிநாட்டிலிருந்த வண்ணம் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.<sup>12</sup>
ஆஷ் கொலையுண்ட பின்னர் செங்கோட்டையிலுள்ள [[வாஞ்சிநாதன்|வாஞ்சிநாதனின்]] வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நாற்பதுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள். அவ்விருவரும் விசாரணைக்குப்பிறகு விடுதலைச் செய்யப்பட்டனர்.<sup>13</sup> ஒரு தேசபக்தரை திருமணம் செய்ததால் பருவமடைந்த நாளிலிருந்து கைம்பெண் வாழ்க்கை வாழ்ந்து வந்த வாஞ்சியின் மனைவி பொன்னம்மாளுக்கு திரு.[[அண்ணாதுரை]] அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஓய்வுகால ஊதியம் வழங்கி கௌரவித்தார்.<sup>14</sup>
 
== சுயஆட்சி இயக்கம்==
வரிசை 564:
# ப.சோழநாடன், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் (சென்னை, ரிஷபம் பதிப்பகம், 2002), பக். 34-63
# தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991, பக். 22-23
# திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள், (சென்னை, 1981), பக். 156-159 ம. பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப.1 61
# ம. பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப.1 61
# சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப. 396, ஆகஸ்ட் 1932, ப. 43
# அரசு ஆணை எண் 507,பொதுத்துறை,15 ஜீன் 1933
வரி 574 ⟶ 573:
# தினமலர், [[மதுரை]], 26 பிப்ரவரி, 2004
# மே.கூ, 15 ஆகஸ்ட், 1999
# மே.கூ,
# ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994