திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
'''புனித அத்தனாசியுஸ்''' அல்லது '''அத்தனாசியார்''' (கி.பி.295-373), எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியாவில் பிறந்தார். இவர் தமது சொந்த ஊரிலேயே ஆயராகப் பணிபுரிந்தார். இவரது காலத்தில் ஆரியுஸ் என்னும் கிறிஸ்தவத் துறவி, இயேசுவின் இறைத் தன்மையை மறுத்து தவறான போதனை (பேதகம்) ஒன்றை வெளியிட்டார். அத்தனாசியுஸ், "கிறஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டவர்" என்ற உண்மையை திருச்சபையின் கருத்துக்கு இசைய உறுதியுடன் போதித்து விசுவாசத்தை பாதுகாத்தார்.
 
===புனித பெரிய பேசில் (கி.பி.330-379)===
'''புனித பெரிய பேசில்''' அல்லது '''பசிலியார்''' (கி.பி.330-379), கப்பதோசியாவைச் சேர்ந்த துறவியாவார். கெசாரியாவில் பிறந்த இவர், தனது வாழ்நாளில் எகிப்திய பாலைநிலத்தின் வனத்துறவிகளை தரிசித்தார். கி.பி. 358ல் அனட்டோலியாவில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்தார். ‘சமூக வாழ்வு, உழைப்பு மற்றும் செபம்’ என்ற துறவற விதியை ஏற்படுத்தினார். பின்னாளில், ஒரு துறவற சபையையும் ஏற்படுத்தினார். 370ஆம் ஆண்டு, இவர் செசாரியாவின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது