பாயிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] '''பாயிரம்''' என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும். இது பாடலாக அமைந்திருப்பதே வழக்கு.
 
==பாயிரம் என்னும் சொல்==
[[பாயிரம்]] என்னும் சொல் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான '[[பழமொழி (நூல்)|பழமொழி]]'யில்தான் பயிலப்பட்டுள்ளது. அடுத்து, '[[பெருங்கதை]]' நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்.
 
 
==வகைகள்==
பாயிரங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. இவை,
#* [[சிறப்புப்பொதுப் பாயிரம்]]
 
#* [[பொதுப்சிறப்புப் பாயிரம்]]
# [[சிறப்புப் பாயிரம்]]
 
என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. [[நன்னூல்|நன்னூலில்]] இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/பாயிரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது